வியாழன், 23 அக்டோபர், 2025

தமிழமுது –151 – தொல்தமிழர் இசை மரபு:.................பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.

 

தமிழமுது –151 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 11.

பேராசிரியர், முனைவர்  தமிழண்ணல்.

பாட்டு வடிவமும் உள்பொருள் உணர்வும் :

 

 

 பேச்சு நடை:

சங்கப் பாடல்களில் சொற்களே கடினம் போல் தோன்றும். பாட்டு நடையில், இன்று நாம் பேசுவது, உரையாடுவது போன்ற அமைப்பைக் காணலாம்.

காதலர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. மணவறையில் பெண், தலை குனிந்து நாணத்துடன் இருப்பதொரு பண்பாடு. தோழி இதைக் கூறி கிண்டல் செய்கிறாள்.

 

 தோழி: விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள்

பண்டறியாதீர் போல் படர்கிற்பீர் மற்கொலோ

மைதவழ் வெற்பன் மணவணி காணாமல்

கையாற் புதிபெறூஉம் கண்களும் கண்களோ?

 

தலைவி ; என்னைமன் நின்கண்ணாற் காண்பென்

மன்யான்!

 

தோழி: நெய்தல் இதழுன்கண், நின் கண்ணாக எண்கன் மன்(கலித்தொகை.)

 

 ”மாப்பிளைக் கோலத்தில் காதலனைப் பார்க்க முடியாத கண்களும் கண்களோ” என்றதற்குத் த்லைவி ‘என்ன கெட்டுப்போனது, உன் கண்ணால் கண்டு மகிழ்வேன்’ என்று கூற, தோழி அப்படியா? ‘ உன் நெய்தல் மலர் போன்ற கண்களாக’ என்கண்கள், ஆனால் நல்லதே என்று கூறுகிறாள். இத்தகைய இனிய உரையாடல் பலவுள.

நற்றிணையில் ஒரு பேச்சு நடைப்பாட்டு ; தோழி தலைவனிடம் அவன் மிகப்பெரிய செல்வனாதலால் ஏழைகளாகிய தங்களுடன் உறவு கொள்வது இயலாதெனக் கூறுகிறாள்.

 இவளே,

கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு

மீன் ஏறி பரதவர் மகளே ,நீயே

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ?

புலவு நாறுதும் செலநின் நீமோ

பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே

எம்மனோரில் செம்மலும் உடைத்தே.”

 

மருதநிலப் பெருஞ் செல்வ மகனுடன், மீன் பிடி  தொழிலுடைய பரதவர் மகள் காதல் எப்படிப் பொருந்திவரும்? இத்தகைய சில பாடல்களைப் படித்தால், மலையாளத் தகழியார் எழுதிய ’செம்மீன்’ நினைவு வரும்.

 

நிலைபெற்ற மானுட விழுமியங்கள்: …….தொடரும்……..

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக