புதன், 29 அக்டோபர், 2025

தமிழமுது –157 – தொல்தமிழர் இசை மரபு:...........முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –157 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 17.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

”திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பதற்கேற்ப  மாணிக்கவாசகருடைய திருவாசகப் பனுவல்கள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சில திருவாசகப் பாடல்களைத் தவிர ஏனையவை பொதுவாக மோகன ராகத்தில் சுத்தாங்கமாகப் பாடப்படுகின்றன. சுத்தாங்கம் என்பது தாளமில்லாமல் இன்றைக்கு விருத்தம் பாடுவதுபோலப் பாடுவதாகும். சந்தப்பாவலப் பெருமான் என்று போற்றப்படுகின்ற அருணகிரிநாதர் பாடிய பாடல்கள் திருப்புகழ் என்று அழைக்கப்படுகிறது.

 

தொங்கல் என்ற அமைப்போடு சந்தப் பாடல்களாக அமைந்த இப்பாடல்களும் பாடப்பட்ட காலத்தில் அமைந்த ராகங்கள் மறைந்து புதிய இசையமைப்பிற்கே பாடப்படுகின்றன. பண் தாளக்குறிப்புகல் எதுவும் கிடைக்கவில்லை.

 

 தாளக்கடல் என்று அழைக்கப்படும் திருப்புகழ்ப் பாடல்களை அவற்றின் சந்தத்தின் அமைப்பிலேயே தாளங்கள் அமைத்து சாதனை புரிந்திருக்கிறார் அருணகிரிநாதர். ஆனால், இன்று இவை குறித்து ஓரளவு அறிந்தவர்கள்கூட மிகச்சிலரே. நடைமுறையில் உள்ள தாளங்களிலேயே இவை பாடப்படுகின்றன. இறைவன் ஒருவனே என்றும் சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் பயனற்றவை என்றும் யோக நிலையில் நின்று பாடிய சித்தர் பாடல்கள் உயரிய தத்துவக்கருத்துகளை உட்கருத்துகளாகக் கொண்டு அனைவரையும் அவற்றிலே ஈடுபாடு கொள்ளச் செய்தன.

 

………………………. தொடர்கிறது…………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக