வியாழன், 30 அக்டோபர், 2025

தமிழமுது –158 – தொல்தமிழர் இசை மரபு:................முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –158 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 18.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

தாயுமானவர் (18ஆம் நூற்றாண்டு) பாடல்கள் சமயங்களைக் கடந்து எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று உலகளாவி நின்றன. சீர்காழி மூவர் என்று அழக்கப்படுகின்ற முத்துத்தாண்டவர் (17ஆம் நூற்றாண்டு) அருணாசலக் கவிராயர் (1711 – 1778) மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1787) ஆகியோர் தத்தம் அளவில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்.

 

 தமிழில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்புடைய கிருதி வடிவத்தையும் பதம் என்ற வடிவத்தையும் முதன்முதலாக இயற்றியவர் முத்துத்தாண்டவர்.  ராமாயணத்தைக் கீர்த்தனைகளாக ராம நாடகக் கீர்த்தனைகள் என்ற பெயரில் இயற்றித் தமிழில் இசை நாடகங்களுக்கு முன்னோடியாகத் திமழ்ந்தவர் அருணாசலக் கவிராயர். நிந்தாஸ்துதி (பழிப்பது போல் புகழ்வது)  என்ற அமைப்பில் படல்களை இயற்றி  அவ்வகைப் பாடல்களை

அறிமுகப்படுத்தியவர் மாரிமுத்தாப்பிள்ளை.

 

ஊத்துக்காடு வெங்கட கவி பாடல்கள் தமக்கெனத் தனி முத்திரை பதித்தவை. 18ஆம் நூற்றாண்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க  இயலிசைப் புலவர் பாபவிநாச முதலியார் ஆவார். அதிகமாகப் புழக்கத்தில் உள்ள நடமாடித் திரிந்த, முகத்தைக் காட்டி பேரும் நல்ல தியாகர் ஆகிய மூன்று நிந்தாஸ்துதிப் பாடல்களும் உம்பேசர் குறவஞ்சியும் இவருடைய படைப்புகள்.

எனினும் 19ஆம் நூற்றாண்டையே தமிழிசையின் பொற்காலம் என்று கூறவேண்டும்

………………………. தொடர்கிறது…………………………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக