ஞாயிறு, 26 அக்டோபர், 2025

தமிழமுது –154 – தொல்தமிழர் இசை மரபு:.....தமிழிசை. முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –154 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 14.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

உலக மொழிகளில் இயல், இசை,நாடகம் என்ற முக்கூறுகளையும் தன்னிடத்தே கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி ஆகும். இலக்கணத்தில் வாழ்வியலைப் பேசிய மொழியும்   தமிழ்மொழிதான். இசைக்கலை பண்டைத்தமிழர்களின் வாழ்க்கையில் பேரிடம் பெற்று இருந்திருக்கிறது. ஆனால், இச்சிறப்புகுறித்த முழுச் செய்திகளும் நமக்குக் கிஐக்கவில்லை. கிடைத்தவற்றையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இடையில் ஏற்பட்ட ஓர் இடைவெளி  காரணமாக அம்மரபின் இழை தொய்ந்துபோய் பல செய்திகள் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போனதொரு நிலையில் நாம் இருக்கிறோம்.

 

இசைப்பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பாடும் முறை தெரியவில்லை அறுவடைக் களத்திலிருந்து போர்க்களம்வரை வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஏராளமான இசைக்கருவிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் பல மறைந்துவிட்டன. சில வேறு பெயர்களில் வழங்குகின்றன. சில மாற்றங்கள் கண்டு தொடர்ந்து பயம்பாட்டிலும் இருந்து வந்திருக்கலாம். ஆங்காங்கே காணப்படும் மேற்கோள்கள் வாயிலாக இசை தொடர்பான நூல்கள் பல இருந்து மறைந்து[ஓயிருக்க வேண்டும் என்று புரிகிறது. 

 

இந்நிலையில் இலக்கண- இலக்கிய நூல்கள், உரைகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், செவிவழிச்செய்திகள் போன்றவற்றின் வாயிலாகப் பண்டைத் தமிழகத்து இசை மாண்பினை ஓரளவு புரிந்துகொள்ளலாம். ஓரளவுதான்.

 

 ”தமிழகத்து இசை வரலாற்றினைத் தொல்காப்பியத்திலிருந்து தொடங்க வேண்டும்” என்பார் வீ.ப.கா. சுந்தரனார். இன்றைய ராகத்தை ஒத்தது பண் எனலாம். பண்முறைதான் அன்று வழக்கில் இருந்திருக்கிறது.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD

………………………. தொடரும்…………………………….

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக