சனி, 7 டிசம்பர், 2019

மணி மகுடம்


மணி மகுடம்
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
…………………………………
காதல் தானும் கடலினும் பெரிதே.
……………….. நற். 166.
 இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் தெரியவில்லை. சொற்சுவையும் பொருட் சுவையும் மலிந்து காதல் சிறப்புரைக்கும்பாடலாகத் திகழ்கிறது.

இனி இச்செய்யுட்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது: தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்என்கிறார் உரையாசிரியர் பொ. வே. சோமசுந்தரனார்.

  பத்து அடிகளைக் கொண்ட இப்பாடல்- முதல் ஐந்து அடிகளில் தலைவனுக்குக் காணுந் தோறும் இன்பம் தரும் தலைவியின் அழகு வருணிக்கப் படுகின்றது’; எஞ்சிய ஐந்து அடிகள் பொருளினும் காதலே சிறந்தது எனக் கூறித் தலைவன்  பிரியேன்எனக் கூறுதலை விளக்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக