வியாழன், 25 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 28: போர்க்களம் புகும் பெண்டிர்.


கிருட்டினகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில்   கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த  இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கிருட்டினகிரி வரலாற்றுப்பேரவைத் தலைவர் அறம். ஏ. கிருட்டினன்,” இவ்விரண்டு நடுகற்களும் அரிதினும் அரிதாக நமக்குக் கிடைத்துள்ளது. பெண்டிர் போர்க்களம் நோக்கிச் செல்வது முதன்முதலாக இங்கே தான் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் அவர் , பொதுவாகப்  போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மட்டுமே நடுகல் நாட்டுவது மரபு.

குறிப்பாக ஒரு நடுகல்லில்  மூன்று பெண்கள் போர் ஆயுதங்களுடன் குதிரையில் செல்வதும் இன்னொரு நடுகல்லில் இரண்டு பெண்கள் குதிரை மீதேறிச் செல்வதக் காணலாம் .” என்று கூறினார்.

இவ்விரண்டு நடுகற்களும் சந்தனப்பள்ளி ‘பன்னியம்மன்’ இருந்துள்ளன . ஆனால் இவ்வூர் மக்களுக்கு  இவை வீரர் வழிபாட்டிற்குரியவை என்று தெரியாது.

கிருட்டினன்,  முதல் நடுகல்லில் இருக்கும் மூன்று பெண்களில் ஒருவர் அரசியாக இருக்கலாம், குதிரையில் இருக்கும் ஏனைய இருவரும் போர் மறத்தி களாக இருக்கலாம்.மூன்று பெண் வீரர்கள் தங்கள் வலது கையில் படைக் கருவிகளைக் கொண்டிருக்கின்றனர்.. இந்நடுகல்லில் ஓர் ஆண் இருக்கிறார், அவர் அப்பெண்களின் பாதுகாவலராகவோ அல்லது அவரும் ஒரு வீரராகவோ இருக்கலாம்” என்று கூறினார்.

எனினும் இந்நடுகற்களைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்குச் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை என்றார்.

தொல்பழங்காலத் தமிழர் வாழ்வியலில் பெண்டிர் போர்க்களம் புகும் மரபில்லை. மறக்குடி மகளிர் குறித்து விரிவாகப் பேசும் சங்க இலக்கியங்கள்  போர்த்தொழிலுக்குரிய ஆண் மறவர்களை ஈன்றெடுத்தலும் வெற்றி வீரனாக களத்தில் மார்பில் புண்பட்டு இறந்தானா  என்று பார்த்துத் தாய் மகிழ்வதையே இலக்கியங்கள் கட்டுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் போர்க்களம் புகுந்த வீர மங்கை வேலுநாச்சியார், குயிலி இன்றும் நம் நினைவில் நிற்பதை மேற்சுட்டிய நடுகற்கள் காட்டுகின்றன.


புதன், 24 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 27 : எடக்கல் குகையில் தமிழி கல்வெட்டு.

 

தமிழாய்வுத் தடங்கள் – 27 :   எடக்கல் குகையில் தமிழி கல்வெட்டு.



கேரளா, வயநாடு மாவட்டத்தில் எடக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள குகையில்  சிந்து வெளி நாகரிகத்தோடு தொடர்புடைய தமிழி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றினைத் தொல்லியல் ஆய்வாளர் எம்.ஆர். இராகவ வாரியார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டு கி.மு 5ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும்  இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது என்கிறார். இதில் உள்ள எழுத்துக்களை ’சிறீ வழுமி’ என்றும் இச்சொல்லின் பொருள் ’கடவுள் பிரம்மா’ என்பதாகும். இக்கல்வெட்டு எழுத்து வடிவ முறை இந்திய மரபு உடையதாகத் தெரிகிறது. எடக்கல் குகைகள் வளநிலப் பண்பாடு கொண்டவையாகும். எடக்கல் வெளிப்படுத்தும் நாகரிகம் இந்தியாவின் தென்பகுதி வரை பரவியது எனலாம். இக்குகைகளில்  சமண பெளத்தத் துறவிகள் வாழ்ந்து இவ்வெழுத்துக்களைக் கொண்டு இலக்கண இலக்கியங்களையும்  மருத்துவம், வானியல் முதலியவற்றைப் பாடங்களாக எழுதினர். எடக்கல் குகை அரிய பல வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும் என்கிறார் வாரியார்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் – 26 : பழனியில் சங்க காலக் குகை ஓவியங்கள்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 26 :   பழனியில் சங்க காலக் குகை ஓவியங்கள்.



2500 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலக் குகை வாழ் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கு உதவும் ஓவியங்களைத் தொல்லியல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வ றிஞர்கள் குழு, வி. நாராயணமூர்த்தி, கன்னிமுத்து ஆகியோர் தலைமையில் ஆண்டிப்பட்டி மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு ஆடு மேய்த்தவரிடம் குகை இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு  சுமார் இரண்டு மணி நேரம் மலை மீதேறி குகை ஓவியங்களக் கண்டனர். ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் மரப்பசை கொண்டும் பச்சிலை வண்ணங்களைக் கொண்டும் தீட்டப்பட்டிருந்ததை ஆய்வு செய்தனர்.  அவைகள் கேலிச் சித்திரங்கள் (இன்றைய கோட்டோவியங்கள்) போலிருந்தன. ஒரூ பக்கம் குழிதோண்டி அதில் யானையைப் பிடிக்கும் முறையும் அவர்கள்  தலைவன் யானை மீதேறி வருவது போலவும் இருந்தன. விழாவுக்காகப்  பெண்டிர் பானையில் நீர் எடுத்து வருவதுபோலவும், குழந்தைகள் கைகோர்த்து நடனமாடுவது போலவும் விழாவில் ஓர் ஆடு பலியிடுவது போலவும் ஓவியங்கள் இருந்தன. ஒவியங்கள் குறிஞ்சி நிலமக்களின் சடங்குகளைக் காட்டுவதாக அமைந்திருந்தன. தீட்டப்பட்ட ஓவியங்கள் சங்க கால இனக்குழு மக்களின் வாழ்வியலாகும். இதனால் இத் தொல்பழங்குடி மக்கள் கி.மு. 1000 – 300. காலப் பகுதியில் வாழ்ந்தனர் எனலாம். இவ்வோவியங்கள் மத்திய பிரதேச பீம்பெட்கா  குகை ஓவியங்களை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 


திங்கள், 22 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -25 – கீழடி – தொல்லியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.



2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலத் தமிழரின் வாழ்வியலை உலகிற்கு வழங்கிய கீழடி அகழாய்வின் அருமை பெருமைகளை அறிந்த மாணவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை முதுகலை வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு 88 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன என்றார் பேராசிரியர் பி.டி. பாலாஜி. 60 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏற்கெனவே 33 மாணவர்கள்  பணம் கட்டியுள்ளனர். கடந்த காலங்களில் ஓரிரு மாணவர்களே சேர்ந்துள்ளனர். 216-17 இல் 18 மாணவர்களே சேர்ந்தனர். இவ்வாண்டு 4 பொறியியல் படித்த மாணவர்கள்  தொல்லியல் துறையில் முதுகலையில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

கீழடியில் கிடைத்துள்ள தமிழி எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -24 – 2,200 – ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி நாகரிகம்.

 

தமிழாய்வுத் தடங்கள் -24 – 2,200 – ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி நாகரிகம்.



தொல்பழங்கால நாகரிகங்கள்:கி.மு.

1.மெசபடோமியன் ------------2600 – 1900.

2. எகிப்து-------------------------3100 – 332.

3 . சிந்து சமவெளி -------------2600 – 1900.

4 . சீனா --------------------------1600 -1046.

5 .கிரேக்கம் ---------------------2700 முதல்.

6 . மயன் --------------------------2000 – 1539.

 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி அகழாய்வு , அறிவியல் ஆய்வின்படி  சங்க காலம் கி. மு 300 என்று. அறியமுடிகிறது. கீழடி அகழாய்வை மேற்கொண்ட  அமர்நாத் ராமகிருட்டினன் தமிழரின் தொன்மைச் சிறப்பினை உலகமறியச் செய்தார். 110 ஏக்கர்  ஆய்வுக்களம் கொண்ட கீழடியில் 2,5 மீட்டர் ஆழம் வரையே தோண்டப்பட்டுல்ளது. 110 ஏக்கர் முழுவதும்  4.5 மீட்டர் ஆழத்திற்கு அகழாய்வு மேற்கொண்டால் தமிழரின் தொன்மைச் சிறப்பினைத்  துல்லியமாக அறுதியிட்டுக் கூறலாம் என்றார். கீழடியில் கிடைத்துள்ள 20 பொருள்களில்  ஒன்றிய அரசு இரண்டு பொருள்களைமட்டும் ‘கார்பன் கால ஆய்வுக்கு அனுப்ப இசைவளித்துள்ளது ; ஆனால், வடமாநில அகழாய்வில் (15+18) பொருள்களை ஆய்வுக்கு அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. தமிழின் தொன்மையை உலகறிய ஒன்றிய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.  தமிழ்நாட்டரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருட்டினன்.

 


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -23 – 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள்.

 

தமிழாய்வுத் தடங்கள் -23 – 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள்.



புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட   7- முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். தாழியில் அக்கால மக்கள் பயன்படுத்திய , இரும்பு,(ஐந்து வாள்கள்,  மூன்று  ஈட்டிகள் , நான்கு குத்து வாள்கள், கத்திகள்)  செம்பு, ( இரண்டுபாத்திரங்கள்) பித்தளை, (ஒரு மணி )  பீங்கான், களிமண் ஆகியவற்றால் ஆகிய  பொருள்களுடன் தாழியின் அருகே மதிப்புமிக்க  அரிய கற்களும்  கண்ணாடியால் செய்யப்பெற்ற சில பொருள்களும் கிடைத்துள்ளன. கற்காலத்திற்குப் பிந்தைய பகுதியாகிய நியோலிதிக் காலத்தைச் சார்ந்த (கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட )  கற்கருவிகளும் கிடைத்துள்ளன. இப்பகுதி துறைமுக நகரமான அரிக்கமேடு வாழ்வியலோடு உறவுடையதாகத் தெரிகிறது என்கிறார் பேராசிரியர் இரவிச்சந்திரன்.  அவர், மேலும்  இப்பகுதியில்  அகழாய்வு மேற்கொள்ள வேண்டியிருப்பதாகும் கூறுகிறார்.


வியாழன், 18 ஏப்ரல், 2024

தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில் ஓர் அரிய முத்திரை.

 

தமிழாய்வுத் தடங்கள் -22 –சிந்துவெளி ஆய்வில் ஓர் அரிய முத்திரை.



பஞ்சாப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கக்ரா ஆற்றுப் படுகையில்,கி.மு. 2500 – 2000. காலப்பகுதிக்குரியதாகச் சிந்துசமவெளி நாகரிகத் தொன்மைக்குச் சன்றாக “வரையாடும் எழுத்து வடிவங்களும் இடம்பெற்றுள்ள முதிரையைக் கண்டுபிடித்துள்ளனர்.   இம்முத்திரை சதுரவடிவில் உள்ளது.  வரையாடு மிக நேர்த்தியான கலையழகுடன் வடிக்கப்பட்டுள்ளது. இம்முத்திரை சிந்துவெளி மக்களின் நாகரிக வாழ்க்கை முறையினைக் காட்டுவதாகக் கூறுகின்றனர்.