புதன், 5 பிப்ரவரி, 2020

”வேதாளம் சேருமே....


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமேமூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. – நல்வழி.

வழக்கு மன்றத்தில் உண்மை, பொய்களை ஆராய்ந்து நடுநிலையாக, மனச்சான்றுடன் தீர்ப்பு வழங்காதவரின் வீட்டில் பேய்கள் குடிபுகும், எருக்கஞ்செடிகள் பூக்கும், பாதாள மூலி (நெருஞ்சில் / சீந்தில் கொடி) படரும், மூதேவி வீட்டிற்குள் குடியேறுவாள், பாம்புகள் விரும்பி வாழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக