செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-243.

 

தன்னேரிலாத தமிழ்-243.

அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும்

        அழகும் வெற்றியும் தத்தம்

குடியும் மானமும் செல்வமும் பெருமையும்

        குலமும் இன்பமும் தேசும்

படியு மாமறை ஒழுக்கமும் புகழுமுன்

        பயின்றகல்வியுஞ் சேர

மடியு மால்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்

        வைப்பாரோ மனம் வையார்.” –வில்லிபாரதம், 11: 64.

அறிவுடையோர் சூதாடுவதை விரும்புவாரோ..? தலைமையும் ஆண்மையும் படையும் அழகும் வெற்றியும் குடிப்பெருமையும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் புகழும் நான்மறை ஒழுக்கமும் கற்றகல்வியும் இன்ன பிற நற்பயன்கள் யாவும் சூதினால் அழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக