புதன், 16 ஜூன், 2021

தன்னேரிலாத தமிழ்-274.

 

 ன்னேரிலாத தமிழ்-274.

558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோல்கீழ்ப் படின்.


நீதிநெறி தவறிய அரசனின் கீழிருந்து வாழும் செல்வ வளமுடைய வாழ்க்கை, கொடிய வறுமை சூழ்ந்த வாழ்க்கையைவிடக் கொடுமையானதாகும்.


“” குடிகொன்று இறை கொள்ளுமோ கோமகர்க்குக் கற்றா

மடிகொன்று பால் கொளலும் மாண்பே குடிஓம்பிக்

கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்

வெள்ளத்தின் மேலும் பல.” --- நீதிநெறி விளக்கம், 29.


தன் குடிமக்களைப் பெரிதும் வருத்தி வரி வாங்கும் வேந்தனைவிடக் கன்றினை உடைய பசுவின் மடியை வருத்திக் கன்றுக்குப் பால் விடாமல், கறத்தலும் நல்ல செயலே ; அப்படி வருத்தி வரி வாங்கினாலும் அவனிடம் செல்வம் சேர்ந்திருப்பது இல்லை , மாறாகக் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்து முறையாக வரி வாங்கும் வேந்தனுக்கு, வெள்ளம் என்னும் அளவைவிடப் பல மடங்கு பெருமை பொருந்திய செல்வம் சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக