திங்கள், 13 டிசம்பர், 2021

 

தன்னேரிலாத தமிழ் –379 : குறள் கூறும்பொருள்பெறு.

 

178

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.


செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குக் காரணம் யாதெனின், பிறர் பொருளைக் கவர்ந்து வாழ எண்ணாமல் இருப்பதுதான்.

கவர்ந்துண்டு வாழ்தல் இரந்துண்டு வாழ்தலினும் இழிவு.


இசைபட வாழ்பவர் செல்வம் போலக்

காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.” --- நற்றிணை, 217.


புகழ் மிகும்படி வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணுந் தோறும் பொலிந்து தோன்றுகின்ற ஆண் யானை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக