செவ்வாய், 4 ஜனவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –395: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –395: குறள் கூறும்பொருள்பெறு.

 

314

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


தமக்குத் துன்பம் செய்த ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் முதற்படியாக, அவர் வெட்கித் தலை குனியும்படியாக ஒரு  நன்மையைச் செய்வதோடு, அவர் செய்த துன்பத்தையும் மறந்துவிடு.


நல்லோர் நற்பண்பு: துன்பம் செய்தார்க்கும் நன்மைசெய்வர். 


செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்

அரும்பெறல் உலகத்து ஆன்றவர்

விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.”புறநானூறு,213.


வேந்தே…! வானோர் உறைகின்ற உயர்ந்த உலகத்தின்கண் உறைபவர், விரைந்து விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளுமாறு நீ, என்றும் நன்றே செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக