புதன், 25 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –455: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –455: குறள் கூறும்பொருள்பெறுக.


550

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட்டு அதனொடு நேர்.


  மன்னன்,  நாட்டில் உலவும் மிகக் கொடியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது,  உழவன் பயிர்களைக் காப்பற்ற களைகளைக் களைதற்கு ஒப்பானதாகும்.


இளை இனிது தந்து விளைவு முட்டுறாது

புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்.” ~~ பதிற்றுப்பத்து, 28.


வேந்தே…! ( பல்யானைச் செங்கெழு குட்டுவன்),  நின் நாட்டினை இனிதாகக் காத்துப் பயிர் விளைச்சல் குறையாதபடி செய்து, குடிமக்கள் அனைவரும் பகை, பசி, பிணி என்னும் துன்பங்கள் இன்றி, அமைதியாக வாழும்படி ஆட்சி செய்தலே பெருமை உடையதாம்.  கள்வனைக் கோறல் கடுங்கோலன்று (சிலம்பு) கள்வனைக் கொன்றொழித்தல் அரச நீதி என்பான்  பாண்டிய மன்னன்.

1 கருத்து: