சனி, 20 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –498: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –498: குறள் கூறும்பொருள்பெறுக.

 

682

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.


அன்புடைமை, அறிவுடைமை,  ஆராய்ந்தறிந்த செய்திகளைக் கேட்போர் மனங்கொள எடுத்துரைக்கும் சொல்வன்மை, ஆகிய இம்மூன்றும்  தூது உரைப்பானுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.


தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு

ஞானத்தின் மிக்க உசாத் துணையும் மானம்

அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை

பழியாமல் வாழும் திறம்.” அறநெறிச்சாரம், 62.


தகுதி மிக்க சான்றோர்க்கு வேண்டுவன அளித்துத் துணை புரிவதைக்காட்டிலும் சிறந்த அறமும் ; பெரியோர்களுக்கு அறிவைக் காட்டிலும் சிறந்த துணையும் ; மானம்  கெடாத உயர்ந்த நல்லொழுக்கமும் ஆகிய இம்மூன்றைக் காட்டிலும் பிறர் பழிக்காமல் வாழ்வதற்கு ஏற்ற செயல்கள், எதுவும் இல்லை என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக