செவ்வாய், 11 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 19 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 19 - பேராசிரியர் சி. இலக்குவனார்

,தேர்வு முறையில் மாற்றம்


”கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களின் புலமைச் சிறப்பை அளந்து அறிவதற்கு இன்று நடத்தப்படும் தேர்வுகள் பலவகைகளில் குறைபாடுடையன என்பதில் ஐயமில்லை. புலமையை அறிவதற்குத் தேர்வுகள் என்ற நிலை மாறித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குப் புலமை பெறுதல் என்று உண்டாகிவிட்டது. ஆதலின் தேர்வுகளில் முதன்மையாக வெற்றி பெறுவோர்களில் பலர் புலமைக் குறைபாடுடையவர்களாக உள்ளனர். அன்றியும் தேர்வுக்கென ஆயத்தம் செய்வதே கல்வித் திட்டத்தின் குறிக்கோள் என்று ஏற்பட்டுவிட்டதனால் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் உள்ள உறவும் ஒழுங்கு கட்டுப்பாடு முதலியவற்றில் உறுதிப்பாடும் விரும்பத்தக்கனவாய் இல்லை”…..தொடரும்.   இலக்குவனார் இதழுரைகள். (1964) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக