வெள்ளி, 24 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -15

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -15

”குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்

     குழகரே ஒழுகுநீர்க் கங்கை

அழகரே யாகில் அவரிடங் களந்தை

     அணிதிகழ் அதித்தேச் சரமே.” எனவும்

 

( திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் திருவாய் மலர்ந்தருளிய ‘கருவூர்த்தேவர்’ இத்தலத்தில் அருளிச் செய்த திருவிசைப்பா பத்தும் களந்தை எனும் ஊர்ப்பெயர் கொண்டு விளங்குதலைக் காணலாம்)

 

திருக்களந்தை ஆதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும் இறைவரின் திருப்பெயர் அழகர் ( அழகியநாதசுவாமி ) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் “இராசேந்திர சோழவளநாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம்” என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன.ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தரிவிக்கின்றன. இறைவற்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது.”

……………………தொடரும்………………….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக