சனி, 22 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 9 குமரிக்கண்டம் -- தொல்காப்பியம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 9

குமரிக்கண்டம் -- தொல்காப்பியம்

”வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து – தொல்.பாயிரம்.

வேங்கட மலையின் வடபகுதி வரையிலும் குமரி மலையின் தென்பகுதி வரையும் தமிழக எல்லைக்கு உட்பட்டன.

இன்று காண்பதுபோல் தெற்கும் குமரிக் கடலாக இருந்திருப்பின் வடதிசைப் பகுதிக்கே எல்லை கூறியிருப்பார். தென்குமரியென்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின் தொல்காப்பியர் காலத்து நீண்ட நிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு. தெற்கே பஃறுளி யாறும்  குமரி மலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம்".- வ.சுப. மாணிக்கம், தொல்.எழுத்து, மாணிக்க உரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக