வியாழன், 28 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…45.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…45.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்.”

 

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் தமிழ் கூறும் நான் மறையாம் ( அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்காம்)  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அருளிய   தேவாரமும் ; மாணிக்கவாசகர் அருளிய  திருக்கோவையாரும்   திருவாசகமும், திருமூலர் அருளிய திருமந்திரமும்  ஆகிய நூல்கள் சான்றோர் ஆக்கியளித்தவையாகும் அவை யாவும் வழுவின்றி மானுட சமுதாயம் வாழ்ந்திட வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளன என்பதறிந்து அவற்றை முழுமையாகக் கற்றுணர்வாயாக.

 நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக