தமிழமுது –126 –
பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.-
”கடல் கொண்ட தென்னாடு.”
பன்மொழிப்
புலவர் கா. அப்பாத்துரை.-
”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”
“இன்றைய தமிழ்நாடு ‘திருவேங்கடம்
முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. ஆனால், முன் நாட்களில் தமிழ்நாட்டின்
பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன.
மிகப்பழைய இலக்கணங்களிலும் நூல்களிலும் உரைகளிலும்
குமரி முனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு நிலமாயிருந்தது என்றும் அந்நிலப்பகுதி பல்லூழிக்காலம்
தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்ட்தென்றும் ஆசிரியர்கள்
உரைக்கின்றனர்.
இப்பரப்பிலிருந்த நாடுகள்,
அரசுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளும் விவரங்களும் ‘சிலப்பதிகாரம்,
புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. ஆங்கிருந்த மலைகளுள் ‘குமரி மலை’
ஒன்று என்றும் ஆறுகளுள், குமரி, பஃறுளி இவை தலைமையானவை என்றும் தெரிகின்றன.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும் …………………