தமிழமுது –.80 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.
காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.
காமம் தாங்குமதி என்போர்
தாம் அஃது
அறியார் கொல்லோ அனை மதுகையர்கொல்.” –குறுந்தொகை.
தோழி….! காம நோயைத் தாங்கிக்கொள் என்று அறிவுரை
கூறுகின்றவர்கள், தாம் அக்காமத்தின் தன்மையை அறியவில்லை போலும்
அவர்கள் மன வலிமை உடையவர்கள் என்று கூறினாள் தலைவி.
“சிறு கோட்டுப்
பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காம்மோ
பெரிதே.” – குறுந்தொகை.
பலாமரத்தின் சிறிய கிளையில் பெரிய
பழம் தொங்குவதைப்போல், இவள் உயிரோ
மிகச் சிறியது; காமமோ மிகப்பெரிது.
“தெண் நீர் மலரின்
தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே.” –நற்றிணை;23.
தெளிந்த நீரில் உள்ள மலர் போன்ற இவள்
கண்கள் அழகு இழந்தன ; அவை காமத்தை
மறைக்க இயலாது தவிக்கின்றன .என்றாள் தோழி.
”படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். “ –குறள்: 1175.
கடலே சிறிதெனச் சொல்லும்படியான பெரியதாய காமநோயை
எனக்குத் தந்த கண்கள் இன்று துயிலாது துன்பத்தில் உழல்கின்றன.
அஃறிணை- காமக் கலவி.
” பாலும் நீரும் பாற்படப் பிரித்தல்
அன்னத் தியல்பென அறிந்தனர் கொள்ளே”.-
இளம்பூரணர்.
அன்றில், புறா, அன்னம் என்னும் இம்மூவகைப்
பறவைகளும் காமக் கலவியில் நேம நியமங்களுடையன. முன்னைய இரண்டும் நிலத்தில் மாத்திரம்
வாழ்வன. அன்னம் நீரிலும் நிலத்திலும் சீர்மையாய் வாழும் நீர்மையது. தனது சேவலிடம் ஆவல்
மிகவுடையது. கலவியால் அலகில் இன்பம் தருவது. அன்பு மிக அமைந்தது. அதிசய நீர்மைகள் இயல்பாய்
இனிது வாய்ந்தது.”
அன்னத்து அன்ன மென்னடை அன்னத்துப்
புணர்வின் அன்ன தண்டாக் காதல்
“ –பெருங்கதை.
Pl. donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
.………………………தொடரும்
------------------------------