வியாழன், 24 ஜூலை, 2025

தமிழமுது –.80 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

தமிழமுது –.80 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது

அறியார் கொல்லோ அனை மதுகையர்கொல்.” –குறுந்தொகை.

தோழி….! காம நோயைத் தாங்கிக்கொள் என்று அறிவுரை கூறுகின்றவர்கள், தாம் அக்காமத்தின் தன்மையை அறியவில்லை போலும் அவர்கள் மன வலிமை உடையவர்கள் என்று கூறினாள் தலைவி.

 

சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்

உயிர்தவச் சிறிது காம்மோ பெரிதே.” – குறுந்தொகை.

பலாமரத்தின் சிறிய கிளையில் பெரிய பழம் தொங்குவதைப்போல், இவள் உயிரோ மிகச் சிறியது; காமமோ மிகப்பெரிது.

 

தெண் நீர் மலரின் தொலைந்த

கண்ணே காமம் கரப்பு அரியவ்வே.” –நற்றிணை;23.

தெளிந்த நீரில் உள்ள மலர் போன்ற இவள் கண்கள் அழகு இழந்தன ; அவை காமத்தை மறைக்க இயலாது தவிக்கின்றன .என்றாள் தோழி.

”படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண்.  “ –குறள்: 1175.

கடலே சிறிதெனச் சொல்லும்படியான பெரியதாய காமநோயை எனக்குத் தந்த கண்கள் இன்று துயிலாது துன்பத்தில் உழல்கின்றன.

 

  அஃறிணை- காமக் கலவி.

” பாலும் நீரும் பாற்படப் பிரித்தல்

அன்னத் தியல்பென அறிந்தனர் கொள்ளே”.- இளம்பூரணர்.

 

அன்றில், புறா, அன்னம் என்னும் இம்மூவகைப் பறவைகளும் காமக் கலவியில் நேம நியமங்களுடையன. முன்னைய இரண்டும் நிலத்தில் மாத்திரம் வாழ்வன. அன்னம் நீரிலும் நிலத்திலும் சீர்மையாய் வாழும் நீர்மையது. தனது சேவலிடம் ஆவல் மிகவுடையது. கலவியால் அலகில் இன்பம் தருவது. அன்பு மிக அமைந்தது. அதிசய நீர்மைகள் இயல்பாய் இனிது வாய்ந்தது.”

 

அன்னத்து அன்ன மென்னடை அன்னத்துப்

புணர்வின் அன்ன தண்டாக் காதல் “ –பெருங்கதை.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

புதன், 23 ஜூலை, 2025

தமிழமுது –.79 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்:ஆடவர்.

 

தமிழமுது –.79 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்:ஆடவர்.

மன்மத லீலை வென்றார் உண்டோ…?

காமம்பருவ விளைவின் விழைவே. சங்கப்புலவர்கள் காமவிழைவை நோய் என்று கூறுவர். இப்பாலியல் வேட்கை உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே நின்று வருத்துவதால் அதனை நோய் என்றனர்.

ஆடவர், பெண்டிர் அறவழி நிற்றல் வேண்டும்;

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

 அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.” –குறள்: 148.

ஆடவர் கற்புடன் வாழ்தல் வலியுறுத்தி வள்ளுவர் கூறினார்.

பிறன் மனையாளைக் கண் எடுத்தும் பார்க்காத  ஒழுக்கம் உடையவன் சான்றோனாகும் தகுதி மட்டுமன்று அஃது அறமுமாகும்.

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.-குறள்:57.

பருவமுற்ற மகளிரைக் கற்பொழுக்கம் கெடாது  கண்ணுக்குள் வைத்துக் காக்கும் காவல் என்ன பயனைத் தரும் ; மகளிர் பருவப் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தித்  தம்மைத் தாமே

 காத்துக்கொள்ளும் காப்பே சிறப்புடையதாம்.

காமக் களிப்பு- பேரின்பம்: ஆடவர்.

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள. –குறள். 1101.

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் சுவைத்தும் மூக்கால் நுகர்ந்தும் உடலால் தழுவியும் துய்க்கப்பெறும் ஐம்புல  இன்பங்கள் யாவும்  ஒளி பொருந்திய வளையல் அணிந்த இப்பெண்ணிடத்தே  இருக்கின்றன. அஃதாவது  ஐம்புலன்களும் ஓரிடத்தில்  ஒரே நேரத்தில் ஒருசேர துய்க்கப்பெறும் காமக் களிப்பைக் குறித்தார்.

 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.” –குறள். 1105.

 மலர் மணம் கமழும் அழகிய கூந்தலை இவளின் தோள்கள், விட்டகல நினையாத வேட்கையால் விழையும் விழையும் பொருள்களைப் போல, விருப்புடன் புணருந்தோறும் இன்பம் அளிக்கின்றனவே.

 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு,” குறள். 1110.

சான்றோர் நூல்களக் கற்குந்தோறும் அறியாத புதிய செய்திகளை அறிந்துகொள்வதைப்போல, அழகிய அணிகலன்கள் பொலிவு பெற அணிந்த இவளைப் புணருந்தோறும் காம இன்பம் முன்னினும் சிறந்து புதுமையாகத் தோன்றுகிறதே…!.

 

இன்பத்துள் சிறந்த இன்பம்:

வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்

கவ்வுப் புலந்துறையும் கழிபெருங் காமத்து

இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்.” – அகநானூறு.

 நெஞ்சே….!  தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து, மிகுந்த காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை. –என்றான் தலைவன்.

மன்மத லீலை வென்றார் உண்டோ…?

 

 

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

செவ்வாய், 22 ஜூலை, 2025

தமிழமுது –.78 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காதல் - காமம்- கண்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.

 

தமிழமுது –.78 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காதல் - காமம்- கண்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகள்.


 காமம் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உளவென மொழிப.-தொல்காப்பியம்.

காதல் உணர்வை வெளிப்படுத்தாத கண்கள் இல்லாததால், பெருமை பொருந்திய நாணமும் மடனும் ஆகிய இரண்டும் உள்ளன என்று கூறுவர்.

 

காதல் கண்கள்வழியே வெளிப்படும்:

நோக்கு எனும் சொல்லேகாதல் பார்வைஆகும்.

“காலே பரிதப்பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந்தனவே”

காதலன் வரவை எதிர்நோக்கி கண்கள்  ஒளி இழந்த்தது.

  (குறுந்தொகை)

 சிலம்பில் இளங்கோவடிகள்,

“செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும்

கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து.”

எனக் கண்கள் ஆயிரம் குறிப்புகள் காட்டும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை ஆடற்கலையில் வைத்துக்காட்டுகின்றார்.

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள. –குறள்:1099.

அயலார் போல் நின்று  பொது நோக்கு நோக்குதல் மனத்தில் காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

 

கண்ணும் கண்ணும் பரிமாறும் காதல் உணர்வுகளைத் திருவள்ளுவர் , தகையணங் குறுத்தல், குறிப்பறிதல், நலம்புனைந்துரைத்தல், காதல் சிறப்புரைத்தல், அலரறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர் மெலிந்திரங்கல்,  கண்விதுப்பழிதல் ஆகிய அதிகாரங்களுள் மிக விரிவாக எடுத்துரைக்கின்றார்.

 

“ எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள.” –கம்பன் காவியம்.

பழைய திரைப்படப் பாடல்கள்:

கண்ணில் தோன்றும் காட்சியாவும் கண்ணே உனது காட்சியே

மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே.”

 

“காளைக் கன்றுபோல் உருவம் கொண்ட ஆள் ஒருவன்

நின்று போட்ட ஒரு பார்வையிலே – என்னைக்

கொன்று விட்டானடி மாமயிலே.” என்று ஆடவர் காதல் பார்வையின் ஆற்றலைக் குறித்துள்ளார் கவிஞர்.

‘பம்பரக் கண்ணாலே காதல்

சங்கதி சொன்னாளே

தங்கச் சிலைபோல் வந்து

மனதைத் தவிக்க விட்டாளே.”

 

“தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா..?”

 

 பார்வையிலே நோய் கொடுத்தாய்

கன்னியிளமானே

பக்கம் வந்து தீர்த்து வைப்பாய்

கன்னியிளமானே.”

 என்றவாறு கண்கள் காதல் உணர்வை வெளிப்படுத்தும் அழகைக் காணலாம்.

 

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

சனி, 19 ஜூலை, 2025

தமிழமுது –.77 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.77 . தமிழர் அறநெறி வாழ்வியல்.

காதல்காமம்

காதல் – அறவழி நிற்றல் :

 தொல்காப்பியர் காதல் களவொழுக்கமாகும் என்கிறார்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் எனும் நூற்பாவில்

இன்பமும் பொருளும் அறமும் என்று சொல்லப்பெற்ற அன்போடு இணைந்த ஐந்து ஒழுக்கங்களைக் கூறும்போது, காமக்கூட்டம் என்பது தமிழ்மறையோர் தமிழகத்துக் கூறப்பெற்ற எட்டுவகை மணத்துள், இசைத் துறையைச் சார்ந்த யாழ்த்துணையோர் இயல்பே. ஆகும்.

 அதற்குரிய காரணமாவது:

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே.” என்றது

ஒன்றுபடுத்தும் ஊழ்நிலையானும் வேறுபடுத்தும் ஊழ்நிலையானும் அமையும் வாழ்க்கையில் ஒன்றுதலைச் செய்யும் உயர்ந்த ஊழின் ஆணையால், ஒத்த தலைவனும் தலைவியும் காண்பர். தலைவன்  மிக்கோன் ஆனாலும் நீக்கப்படல் இல்லை என்பதாம்.

காதல் வயப்பட்ட இருவரும் ஊரும் உறவும் அறியாவண்ணம் தனிமையில் மகிழ்ந்திருத்தல் நிகழ்வது இயல்பே. எனினும்  இந்நிலை இரண்டு திங்கள் அளவே நீடிக்கும் அக்கால எல்லைக்குள் உடன்போக்கு எனப்படும்  வீட்டை விட்டு வெளியேறி மணம்புரிந்து கொள்வர். இந்நிகழ்வு அறவழிப்பாட்ட தாகும் என்று சான்றோர் இலக்கணை இலக்கியங்கள் கூறுகின்றன.

சான்றாக  ஒன்றைக் காண்போம்.

“ இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

அறம் தலைப்பிரியா ஆறும் மற்றதுவே. –கலித்தொகை. 9.

 தாயே….! விரும்பிய காதலனோடு சென்ற கற்பிற் சிறந்தவளை எண்ணிக் கலக்கம் அடையாதே…! சிறந்தவைனைத் தேர்ந்து அவன் பின்னே சென்றாள் ; அறங்களுள் சிறந்த இல்லறத்திற்குரிய வழியும் அதுவே என்று  உடன்போக்குச் சென்ற இருவரையும் வழியில் கண்ட பெருமக்கள் தலைவியின் தாயிடத்துக் கூறுவதாக இப்படல் அமைந்துள்ளதை நோக்குக.

காதல்  அறவழிப்பட்டுச் சிறப்புற்றதைத் தமிழ் மக்கள் போற்றியுள்ளனர் என்பது தெளிவாகின்றதே! மேலும் இக்காதல்  மணம் புரிந்துகொண்டு இல்லற வாழ்விற்குத் தகுதியுடையதாகையால்  இக்களவு மணம் கற்பில் நிறைவடைகிறது  என்பதையும் அறிதல் நன்று

காமமும் அறவழி நிற்றல்:

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

 

வெள்ளி, 18 ஜூலை, 2025

தமிழமுது –.76 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.76 . தமிழர் இயற்கை வழிபாடு.

காதல்காமம் . அறநெறி வாழ்வியல்.

தமிழரின் வாழ்வியல் நெறியென வகுத்துக்கூறியதாவது அறம், பொருள், இன்பம் என மூன்றுமேயாம். வீடுபேறு என்பது தமிழர் நெறியன்று.

 

“ அறம்பொரு ளின்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.” குறள். 501.

“ அறம், பொருள், இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து  ஒருவனைத் தெளிய வேண்டும் என்பது குறளின் கருத்தாகும்.

 

 அறம் பிறழாமலும் பொருளுக்காகக் கடமையில் தவறாமலும் இன்பத்தின் பொருட்டு ஒழுக்கம் தவறாமலும் உயிர்க்கு உண்டாகும் கேட்டுக்கு அஞ்சிக் கடமை தவறாமலும் உள்ளவனையே  தேர்ந்தெடுக்க வேண்டும்..

  அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன் ‘ என்பதையே வடமொழிக்கு அடிமையான  பிற்காலத் தமிழர்கள்  ‘அறம் பொருள், இன்பம்  வீடு அடைதல் நூற்பயன் என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்று என்பது பழந்தமிழர் கொள்கை எனில் வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல்  முப்பாலாகச் செய்திருப்பாரா..?”

 

“ வள்ளுவர் ஓர் அறிவு நூற் புலவர், அரசியலறிஞர்  வாழ்வியல் கணக்கர், தமிழர் பண்பாட்டின் பெருமையை நன்குணர்ந்தவர்  தமிழினப் பற்றுடையவர்.   தமிழர் நாகரிகத்திற்கும் ஆரியர் நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவர். ஆகையால், அவ்வடபுல மக்களின் பொய் கூற்றுக்களும், போலிக் கொள்கைகளும் தமிழ் மக்களிடையே பரவி வருவதைத் தடுத்து, விலக்கி, மேலும் அவை பரவாமலிருக்க தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களாகிய ஒழுக்க முறைகளை, அகம், புறப் பாகுபாட்டைத் தழுவி அறம், பொருள், இன்பம் என முப்பாலாக்கி ஒரு நூல் செய்து தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த எண்ணினார்.

 

வீடு பேறு என்பதும், வீடு என்பதும் அது ‘சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து’ என்பதும் கற்பனைப் பேச்சாகும். திருக்குறளுக்கும்  வீட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. வினை, பிறப்பு, வீடு, இந்திரன் முதலிய இறையவர் பதங்களை அடைதல், நரகத்தை அடைதல், பிறப்பறுத்தல் வீடு பெறுதல் என்பனவெல்லாம்  ஒன்றுக்கொன்று முரணான விளங்காப் பேச்சுகளேயன்றிப் பயனுடைய பேச்சல்ல. குறளுக்கும் இப்பேச்சுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.” –புலவர். குழந்தை.

 

 அறவழி:

 சங்கப் புலவர்களும் அறநெறி வாழ்வியலைப் போற்றினர்.

“ சிறப்புடை மரபும் பொருளும் இன்பமும்

அறத்துவழி வழிப்படூஉம் தோற்றம்…” –புறநானூறு. 31.

சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறும். இதுவே வள்ளுவர் வாய்மொழி என்பதையும் அறிக.

” அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும்  உடையும் உறையுளும் அல்லது

கண்டதுஇல்… “ என்கிறது. மணிமேகலை.

 வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் இடமும் அளிப்பதன்றி அறம் என வேறு எதனையும் சான்றோர் கண்டதில்லை.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

புதன், 16 ஜூலை, 2025

தமிழமுது –.75 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.75 . தமிழர் இயற்கை வழிபாடு.

காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 தமிழர் வாழ்வியலில்  தொல்காப்பியர் வழிநின்று அறியலாம்.

“ வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.”

 யாவர்க்கும் தெரிந்து மணந்து கொள்ளுதல் ;  யாருக்கும் தெரியாது (களவு மணம்) மணந்து கொள்ளுதல் எனத் திருமணமுறை இரு வகைப்படும் என்பார். இவ்விருவகைத் திருமணமுறை இன்றளவும் தமிழ்ச் சமுதாயத்தில் நின்று நிலவுவதை நாம் அறிவோம்.

களவு கற்பு எனக் கண்ணிய ஈண்டையோர்

உளம் நிகழ் அன்பின் உயர்ச்சி மேன” என்கிறது இறையனார் களவியல்.

களவு என்றும் கற்பு என்றும் புலவர்களால் வகுத்துரைக்கப்பட்ட ஒழுக்கங்கள் இவ்வுலகத்தில் பிறந்தோர்தம் (தலைவன், தலைவி) உள்ளத்தின்கண் நிகழ்கின்ற  அன்பினது உயர்வின் அளவைப் பொறுத்தே அமையும்.

களவு மணமும் கற்பில் நிறைவுறும் என்பர்.அஃதாவது ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறவழி வாழும் வாழ்க்கையைச் சுட்டும். காதல் என்பது உயிர் இயற்கை.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்துவரூஉம் மேவற்றாகும். – தொல்காப்பியம்.

 இன்ப விழைவு என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் மனம் பொருந்தி வரும் விருப்பமுடைமை ஆகும்.

 அத்தகைய இன்ப விழைவே காமம் ; பருவத்தில் விளையும் பாலியல் எழுச்சியே காமமாகும். இஃது ஓர் இயற்கை நிகழ்வே எனினும் அதற்கான ஒழுக்கங்களைச் சான்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

.………………………தொடரும் ------------------------------

செவ்வாய், 15 ஜூலை, 2025

தமிழமுது –.74 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் – சிற்றின்பம்

 

தமிழமுது –.74 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் சிற்றின்பம்

 

இல்லறம்துறவறம்.:

இல்லற நெறிநில்லாதுஇளமை முதற்கொண்டேஇறைநெறி ஏற்று, வீடு பேறு  எனும் பேரின்பம்அடைதல் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வாழ்வோர் துறவறம் கொள்வர். துறவறம் தமிழர் வழக்கன்று. அஃது இயற்கைக்கு எதிரான செயலாகும் என்பதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்ததனால் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்  பழிப்பது இல்லாயின் நன்றே”  எனும் வள்ளுவர் வகுத்த வாழ்வியல் நெறி இயற்கையோடியைந்த வாழ்தலைப் போற்றினர்.அதனால் பருவத்தில் இயல்பாய் விளையும் காதலும் காமமும்  வாழ்வியல் நெறியாயின. அஃதே பேரின்பம் என்றும் கண்டனர்.

 

 இல்லறம் - காதல் :

 “ யாயும் ஞாயும் யார் ஆகியர்ரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” –குறுந்தொகை.

அவனும் அவளும் ஒருவருக்கொருவர் நேரில் கண்டு மகிழ்ந்த நிலையில்  இருவர் உள்ளமும்  செம்மண்ணில் பெய்த மழைநீர் தன்னை இழந்து மண் நிறத்தோடு இரண்டறக் கலந்தது போல்  இருவரும் காதல் வயப்பட்டனர். இஃது ஓர் இயற்கை நிகழ்வே ; பருவத்தில் முகிழ்க்கும் உணர்வே.

 

 ”காதல் தானும் கடலினும் பெரிதே” நற்றிணை.

காதல் –தலைவன் கூற்று:

“அன்பும் மடனும் சாயலும் இயல்பும்

என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி

 இன்றே இவணம் ஆகி….” –அகநானூறு.

நெஞ்சே…! தலைவியின் அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும் ஒன்றுபட்டுள்ள கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க, இன்று இவ்விடத்தே இருந்து மகிழ்ந்தோம்.

காதல் உள்ளம் –தலைவி கூற்று:

 

‘யாத்தேம் யாத்தன்று நட்பே

அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே.” –குறுந்தொகை.

 தலைவனோடு யாம் காதல் உறவினால் பிணிக்கப்பட்டுவிட்டோம்

அந்நட்பை இனி எவராலும் பிரிக்க முடியாது. இந்நட்பு பிறவிகள்தோறும் தொடருமாறு முன்பே முடிக்கப்பட்டு அமைந்ததாகும்.

.………………………தொடரும் ------------------------------

திங்கள், 14 ஜூலை, 2025

தமிழமுது –.73 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் – சிற்றின்பம்

 

தமிழமுது –.73 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மா, அழிவதில்லை….? பேரின்பம் சிற்றின்பம்

பேரின்பம்:

தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில்.கி.பி. 850 -1350.  வரையிலான காலம் ஒரு தனிச் சிறப்புடைய காலமாகும்.  பிற்காலத்திய சாத்திரங்களும் புராணங்களும் சிற்றிலக்கியங்களும் நன்கு வளர்ச்சியடைந்து, சோழர் காலத்தில் சிறப்புற்றிருந்த சைவ, வைணவ சமண, பெளத்தக் கொள்கைகளை வற்புறுத்த எழுந்த காப்பியங்களும் இறைவன் இயற்றிய அற்புதங்களையும்  தொகுத்துரைக்கும் புராணங்களும் மக்களிடையே பரவின. இராசராசன் தொகுத்தளித்த சைவசமய இலக்கியங்கள்  பன்னிரு திருமுறைகளாக உருப்பெற்றன. வைணவ சமய வளர்ச்சிக்கு பன்னிரு ஆழ்வார்கள் அருளிச்செய்த பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தமாக உருப்பெற்றது. இவைபோன்று சமண பெளத்த காப்பியங்களும் எழுந்தன.

  அரசு ஆதரவுடன் சைவசமயம் தழைத்தோங்கியது, கோயிகள் பெருகின மக்கள் இறையருள் பெற விழைந்தனர்.  இறைவனைத் தொழுது பிறவிப்பயனைத் துய்க்க விரும்பி மீண்டும் பிறவாதிருக்க வேண்டினர். இறைவனின் பேராற்றலை எடுத்தியம்பும் பாடல்கள் வழி அவனை வழிப்பட்டுப் பேரின்பப் பயனை அடைவதேயாம்.

இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது அதில் கிடந்து உழலாது  மெய்யடியார்கள் இறைவனோடு இரண்டறக்கலந்து அவன்  அருளைப்பெற்று வீடு பேறு பெற்றுச் சிறப்பதே பேரின்பம் என்றோதப்பட்டது.அப்பேரின்ப நிலை எய்த வேண்டுமானால் துறவு மேற்கொள்ளவேண்டும்.அஃதாவது சீவான்மா பரமான்வோடு ஒன்றுதலாம்.  இல்லறவாழ்வில் ஆணும்பெண்ணும் கலந்துறைவது சிற்றின்பம் என்றனர்.

இல்லறம் – துறவறம்.:

 

.………………………தொடரும் ------------------------------

சனி, 12 ஜூலை, 2025

தமிழமுது –.72 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….?

 

தமிழமுது –.72 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மாஅழிவதில்லை….?

ஆன்மா:

”ஆசை அற்றபோது அந்த மனிதனிடம் அதிசய சித்திகள் பெருகி எழுகின்றன. நிராசையாளன் நித்திய சோதியாய் நிலவுகின்றான். ஆசை ஒழிந்த அளவு அந்த ஆன்மா ஈசன் ஆகிறது.” என்றார் காந்தியடிகள்.

மாயை:

 சீவர்கள் உண்மைநிலையை உணராமல்  பொய்யான மையல் மயக்கங்களில் இழிந்து உழலும் மருள் நிலை.

நில்லாத பொருள்களை நிலையின என்றும் இடையே தேக சம்பந்தமாய் எய்தியுள்ள மனைவி, மக்கள் முதலிய மாயத் தொடர்புகளை மெய் என்று நம்பியும் மயங்கி உழல்பவர்கள் மாயைவசப்பட்டவராவர். ; அவர்கள் ‘அஞ்ஞானிகள்’.

 மெய்ஞ்ஞானிகள் பாசத் தொடர்புகளை அறவே அற்றுவிடுகின்றனர்; விடவே ஈசனைத் தோய்ந்து இன்புறுகின்றனர்.

யோகம்:

 சீவான்மா பரமான்வை மருவி மகிழ்கின்ற புனித நிலையே யோகம். யோகம் ,தியானம், என்பன மகான்களுடைய மேலான நிலைகளைக் குறித்துவருகின்றன.மனம் இறைவனிடம் மருவினால் பிறவி தீரும், பேரின்பம் விளையும்.இலயம் – அடங்கி ஒடுங்கும் நிற்கும் நிலை.   

‘உணர்வினால் உம்பர் ஒருவனை அவனதருளால் உறற்பொருட்டு என்

உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே

உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உவப்பினவும் பழுதேயாம்

உணர்வைப் பெறவூர்ந்திற வேறியானும் தானாய் ஒழிந்தானே.” என்கிறது திருமந்திரம்.

மனிதன் யார்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்

பேரறிவாளன் திரு.-குறள்.215.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின். -216.

 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான் கண்படின். 217.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர். -218.

மேற்குறித்தவற்றால் திருவள்ளுவர்  மனிதத்தன்மையின் பெருஞ் சிறப்பைப் போற்றி உரைப்பதைக் கண்டு தெளிக.

.………………………தொடரும் ------------------------------

வெள்ளி, 11 ஜூலை, 2025

தமிழமுது –.71 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….?

 

தமிழமுது –.71 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆன்மா, அழிவதில்லை….?

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்

பென்ணினும் கற்புடையாள் பெற்றானும்உண்ணும் நீர்

கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்

சாவா உடம்பெய்தி னார்.” என்கிறது, (திரிகடுகம்.16.)

ஆன்ம தத்துவங்கள் -25.

நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் பூதங்கள் ஐந்து.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் புலன்கள் ஐந்து.

மெய்,வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகள் ஐந்து.

கை, கால், வாக்கு, குதம், குறி என்னும் கருவிகள் ஐந்து.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், என்னும் கரணங்கள் நான்கு.

24ம். சடதத்துவங்கள், இதில் சீவன் குடி புகுகின்றான், புகவே தத்துவம் 25. இந்தச் சீவனுள் ஈசன் புகுந்து யாவும் இயக்கி அருளுகின்றான்.

சூரியன்:

ஆதவன் நாளும் ஒளிசெய்து வருவதுஆதி பகவன்’. எந்நாளும் நிலையாத் தொழில் செய்து வருவதைத் தெளிவாக்கி, உலக சோதியான சூரியன் பரஞ்சோதியின் நிலைமை தலைமைகளை நாளும் வெளிசெய்து யாண்டும்  ஒளி புரிந்து வருகிறான்.

பத்தினி:

பதிவிரதையான துரோபதை பெண்களின் மனநிலைகளைக் கூறிகிறாள்….

“ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிகள்

        ஆகவும் இன்னும்  வேறு ஒருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும்

        இறைவனே எனது பேர் இதயம்

அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும்

        ஆடவர் இலாமையின் அல்லால்

நம்புதற்கு உளதோ என்றனன் வசிட்டன்

        இல்லற மனைவியே அனையள்.” (வில்லிபாரதம்.)

சிறந்த அழகரான ஐந்துபேர் எனக்கு நாயகராய் அமைந்துள்ளனர் இருந்தும் மேலும் ஒருவன் மேல் என் உள்ளம் அவாவி ஓடுகின்றது. உத்தம பத்தினிகளுள் நானும் ஒருத்தி, எனது மனமே இவ்வாறு ஆனால் வேறு பெண்களை எவ்வாறு நம்புவது..? நம்ப வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது ; இந்த உலகத்தில் ஆடவர்கள் என்ற பிறப்பே இல்லாமல் மறைந்து போனால் அப்பொழுதுதான் மகளிரை முழுவதும் நம்பலாம் எனக் கண்ணனிடம்  அவள் பேசினாள்.

 எனக்கு ஐவர் பதிகளாயுள்ளனர் ஆறாவது ஒருவனையும் மனம் அவாவுகிறது ஆடவர் யாரும் இல்லாதபோதுதான் எல்லா மகளிரும் பதிவிரதைகளாவர் என வடமொழியிலும் துரோபதை மொழிவாள்.

ஆன்மா:

.………………………தொடரும் ------------------------------

 

வியாழன், 10 ஜூலை, 2025

தமிழமுது –.70 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆன்மா, அழிவதில்லை….?

 

தமிழமுது –.70 . தமிழர் இயற்கை வழிபாடு.

ன்மா, அழிவதில்லை….?

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் – 235.

 உயிரும் உடலும் போனபின்பு, புகழ் உடம்பு என்றும் நிலைத்து நிற்கும் ; அவர்கள் இறந்தாலும் இருப்பவர்களே., சான்றோர்க்கன்றி மற்றவர்களுக்குக் கிடைக்காது.

தொல்காப்பியர் இறந்துவிட்டார் ; திருவள்ளுவர் இறந்துவிட்டார் ஆயினும் அவர்களை நாம் தொல்காப்பியர் கூறுகிறார் ; திருவள்ளுவர் எடுத்துரைகின்றார் என்றே கூறுகின்றோமேயன்றி ; மறைந்த தொல்காப்பியர் என்றோ  காலஞ்சென்ற திருவள்ளுவர் என்றோ கூவதில்லையே…! சான்றோர்கள் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

நல்லோர் ஆன்மா அழிவதில்லை,  அவர்கள் உடம்பு  இல்லை ; அவர்தம் உயிர் நம்மை இயக்குகிறது. நற் செயல், நற்சிந்தனை,  காலத்தைவென்று வாழும் புகழ், இவற்றை உளங்கொண்டு வாழ்வோர் நல்லவர்களே.  தீமை புரிவோர் தியானத்தால் மன அமைதி பெறமுடியாது. உயிர் உடலிலிருந்து ஆற்றும் பணியளவே உயிர் ஆன்மா ஆகிறது.

 

 “ஒருவனது யாக்கை ஊன்பயில் நரம்பில்யாத்த

உருவமும் புகழும் என்றாங்கு அவற்றின் ஊழ்காத்து வந்து

மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்றயாக்கை

திருவமர்ந்து உலகம் ஏந்தச் சிறந்து பின் நிற்கும் அன்றே”  -சூளாமணி.

ஊன் உடம்பு  - அழியும் நற்செயலின்றி பெயர் விளங்காது போதல்.

ஒளியுடம்பு – புகழால் நிலைத்து நிற்கும்.

 

 “கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்

மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன் செய்

வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு

மற்றிவர் செய்யும் உடம்பு. “ நீதிநெறி விளக்கம்.

பரமன் படைத்த உடம்புகள் அழிகின்றன

புலவர் படைத்த புகழ் உடம்பு அழிவதில்லை.

.………………………தொடரும் ------------------------------

 

 

புதன், 9 ஜூலை, 2025

தமிழமுது –.69 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆசிவகம் :2.

 

தமிழமுது –.69 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :2.

வெற்றி வீரர்களைப் பாராட்டிக் கடா வெட்டிப் புலவு உணவு உண்பதை பெருஞ்சோறு என்று போற்றுவர். இதனைச் சங்க இலக்கியம் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை” எனக் குறிப்பிடும். தமிழர்கள் மாவீரர் நாளை பெருஞ்சோற்று நிலயாகக் கொண்டாடினர். சேரமன்னன்  உதயன் சேரலாதன்,

“மறப்படைக் குதிரை மாறா மைந்தின்

முதியர்ப் பேணிய உதயஞ்சேரல்

பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” – என்று அகநானூறு மாமூலனார் பாடல் சுட்டுகிறது.

தமிழர் ஊருக்குப் புறத்தே நடத்தினர் இதற்குக் “கொடைக்கடன்”  என்று பெயர். 

போர்க்களத்தில் உயிர்நீத்தார்க்கு, “ கொடைக்கடன் ஏற்ற கோடா நெஞ்சின் ; உதியன் அட்டில் போல…” என்று அகநானூறு கூறும்.  

பெருஞ்சோற்று நிலையையே – ஐயனார் கோவிலில் கடா வெட்டுதல் ; வீரர்களுக்கு நடுகல் எடுப்பது ;  ஆகியவற்றைச்

 சீர்த்தகு மரபு என்பர்.  

அமரர்ப் பேணுதல் என்பதாவது, வீரர்களுக்குரிய உரிய கடன். இந்தக் கடன் தடுக்கப்பட்டதால் ஒரு பேரரசே சிதைந்தது என்பதைக் காட்டுவதே “ஆண்டிகனான்” என்னும் கிரேக்க நாடகம் ’சோபக்கிளிசு’ எழுதியது.

போரில் வீரமரணம் எய்தவனின் வாளைக் கவிழ்த்து வழிபடுவதே “ ”வாள் வாய்த்துக் கவிழ்ப்பு” ஆகும்.

ஐயனார் கோவில்களில் சார்த்தப்பட்டிருக்கும் பெரிய பெரிய வாள்கள் எல்லாம் வாள் வாய்ப்புச்  சடங்கின் குறியீடுகள்.

 தமிழர் பண்பாடு – பெருஞ்சோற்று நிலயின் அடையாளமே. ஆடு,கோழி வெட்டல்.

 பசுக்களை வெட்டியும்  குதிரைகளை வெட்டியும் அதுவும் ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தி யாகம் என்ற பெயரில் கொன்று குவித்த வைதிகத்தைக் கண்டித்து வளர்ந்த பெளத்த , ஆசிவக சமயங்களின் செல்வாக்கின் காரணமாகவே  வைதிகம் தன் யாகப் பண்பாட்டை மாற்றிக் கொண்டது. யாகங்களுக்குத் தடை விதித்ததால் அசோகனின் மெளரிய மரபு அழிக்கப்பட்டுப் பார்ப்பனிய சடங்குகளுக்கு மறுவாழ்வு தந்த புசியமித்திரனின் சுங்க மரபு தோன்றியது, பெளத்தர்களைக் கொன்று குவித்தனர்.

.………………………தொடரும் ------------------------------

 

செவ்வாய், 8 ஜூலை, 2025

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு. ஆசிவகம் :

 

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :

கி.மு. 6 இறுதியில் இந்தியச் சிந்தனை மரபில் வேத, வைதிக எதிர்ப்பு நிலவியது.புத்தர், மகாவீரர், பக்குடுகை நண்கணியார், பூரணர், நரிவெரூத்தலையார் முதலியோர் தோற்றிய ஒரு புதிய கோட்பாடு ஊழியியல்ஆசிவகம் = வாழ்க்கை முறை.  கணிநந்தவாசான், பூதப் பாண்டியன்நண்பன், - ஆசிவகத்தைச் சார்ந்தவன் என்பர். பூதப்பாண்டியன் இவரை  ‘ வெஞ்சின இயக்கன்’ எனக் குறிப்பார். சங்க காலத் தமிழில் நல்வெள்ளையார், இவரைப் பாலிமொழி ‘பரமச்சுக்க நிலை’ என்கும். இவர் படைத்தலைவர், ஆசிவகர் இவருக்காக எடுக்கப்படுவதுதான் குதிரை எடுப்பு (புரவி எடுப்பு) நிகழ்கிறது.

 

ஐயனாரின் மூன்று நிலைகள் – போர்க்கோலம், பூரணம் பொற்கலை (இரு மனைவியருடன்) மணமாகாத ஐயனார் ஆகியனவாகும். பூரணர், மற்கலி, கணிநந்தவாசான் இம்மூன்று அறிஞர்களும்  ஐயனார்களாகப் போற்றப்படுகின்றனர்.

சித்தன்ன வாசல் ஓவியம் ஐயனார் வரலாற்றின் மூல ஊற்று என்றும் அவ்வோவியங்கள் சமணர்க்கு உரியவையல்ல என்பர்.

ஐயனார் – சாத்தன் – குதிரை வாகனன். ஐயனார்  ஆசிவகத்தில் துறவி எனப் போற்றப்டுகின்றார், அறிவு, வளமை, வீரம்  என மூன்றின் கூறுகளாக்க் கொண்டு வழிபடுவர்.

சாத்தானாகிய ஐயனார் 96 வகையான தருக்க சாத்திரங்களில் வல்லவர் என்பர்.

ஆசிவகர் உணவு – கஞ்சி

ஐயனார் படையல் – பொங்கல்.

 ஐயனார் சிலையைத் துணியால் மூடிவிட்டு,  கடா வெட்டு நடைபெறும். இந்நடைமுறை கருப்புகளுக்கு உரியது (பெரியண்ண சாமி, ஒண்டிக்கருப்பு, பாலடிக் கருப்பு).

.………………………தொடரும் ------------------------------

திங்கள், 7 ஜூலை, 2025

 

தமிழமுது –.67 . தமிழர் இயற்கை வழிபாடு.

அறிவு வழிபாடு:

சூரியனைக் கொண்டு தொடங்கும் ஆண்டைப்போல வியாழனை அடிப்படையாகக் கொண்ட ஆண்டும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. கி.பி. 12 வரை சேர பாண்டிய நாடுகளில் அக்கணக்கு முறையே இருந்தது. சூரியனை ஒரு சுற்று, சுற்றிவர தோராயமாக 12 ஆண்டுகள் (11.86) ஆகும் எனக் கணக்கிட்டு அதனால் ஆண்டுக் கணக்கை 5 சுற்றுகளாக நெறிப்படுத்தி 60 ஆண்டுகளை வரையறை செய்தனர். இவ்வாண்டுக் கணக்கு மறைந்தது. அதன் எச்சமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடந்தையில் கொண்டாடப்படும் மகாமகம்.

தமிழிசை :

 தமிழ் இசை வானியலோடு தொடர்புடையது.

 ஓம் பிரணவ மந்திரம்அறிவியல் குறியீடு. இப்பேரண்டம் பெருவெடிப்பில் பிறந்தது என்பர்.

பெரு வெடிப்பில் காற்று உருவானதுவளி.

வெப்பச்சுழலில் காற்று மோத  உருவானதுதீ

 நெருப்பு குளிர்ந்துமழை / பனி  -- நீர்.

 நீரை அடுத்து  இருந்ததுநிலம்.

இந்நான்கும் செழிக்க நின்றதுவான்.

 

 சங்க இலக்கியத்தில் கடவுள்துறவி / அறிஞர்கள்வாழ்வியல் நெறிகளைப் போதித்தனர்.

 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின். “ –தொல்காப்பியம்.

 கடவுள் நண்ணிய பாலோர் போலஎன்பர்.

திருக்குறள் கடவுள் வாழ்த்து மா மனிதர்களைப் பற்றியது.

சிவன் பூ, எருக்கம். – மணமாகாத ஆண் இரந்தால் எருக்கம் பூ மாலையிடுவர்.  சிவன் -  ஆலமரம்துறவி வடிவம்.

தமிழமுது –.68 . தமிழர் இயற்கை வழிபாடு.

ஆசிவகம் :