திங்கள், 20 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2.................

மாணிக்கத் தூண் தாங்கும்

மரகதமணி மண்டபத்து!

முற்றம் முழுதும்

தூமலர் தூவி

மாவிலைத் தோரணம்

மஞ்சள் குங்குமம் பொலிய

மங்கல மங்கையர் கூடி

இலவங்கம் பச்சிலை

நாகணம் கொட்டம்

நன்னாரி  கத்தூரி

இலாமிச்சம்

குவளை மல்லிகை

மனோரஞ்சிதம் முல்லை

சண்பகம் மகிழம் மணக்கும்

சந்தன நறுநீராட்டி….

கத்தூரி எண்ணெய்

கற்பூரம் புனுகுபூசி

அகிற்புகை இட்டு

ஐம்பால் கூந்தல் அழகுற

சுருண்முறை வகுத்துக்

கருங்குழல் கட்டி

நறுமலர் சூட்டித்

திருநுதல் சுட்டித்

திகழச் சூட்டி

மலரும் மணியும்

முத்தும் பவழமும்

பொனணி பலவும்

மின்னும் மேனியில்

ஒளி மங்க….

பால் நுரை போலும்

பட்டுடை வருத்த

மங்கல ஒலியால்

மன்றம் நிறைய

பொன் தவிசு அமர்ந்த

பொற்பூ மணக்க..!...................தொடரும்…………..

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக