செவ்வாய், 7 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 35: கல் – சிலை – கருவறை - கடவுள் – கடத்தல்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 35: கல்சிலைகருவறை - கடவுள் 

கடத்தல்.


சட்டவிரோதமாக பழங்காலக்  கோவில்களை இடிப்பதால் கோவில்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உடைய தூண்களையும் சுவர்களையும் தேர்களையும்  திருடுவதற்குத்  திருடர்களுக்கு எளிதாகிறது.

மதிப்புமிக்க தொல்பொருள்களக் கொள்ளை அடிக்கும் கடத்தல்காரார்களின் தாரகமந்திரம்; ‘ கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கு ;தங்கக் கட்டிகளைத்தைத் தட்டித்தூக்கு, என்பதாகும்.

படத்தில் உள்ளவை : இடிக்கப்பட்ட தஞ்சாவூர் நாகநாதசாமி  கோவில் வளாகத்தில் கவனிப்பின்றிக் கிடக்கும்  சிலைகள்.

இடைக்காலக் கோவில் வளாகத்தில் இடுபாடுகளில்  சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சுவர்களும் தேர்களும் வாகனங்களும் கடத்தல்காரர்கள் கடத்திச் செல்வதற்கு எளிதாகச் சிதறிக்கிடக்கின்றன..

ஆயிரம் ஆண்டுகள பழமையான, இராசேந்திரச்சோழன் கால நாகநாதசாமி கோவில் இது, தஞ்சாவூர் கும்பகோணம் அருகில் உள்ள மானம்பாடிஎன்னும் ஊரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது, அலங்கோலமாகக் கிடக்கிறது.

 இந்திய நெடுஞ்சலைத்துறையினரால் கோவில் அகற்றப்படும் என்றபோது தமிழ்நாட்டரசு கோவிலைக் காப்பாற்றியது. ஆயினும் 2016 இல் கோவில் இடிக்கப்பட்டது. அதன்பின் ஆறுமாதங்கள் கழித்து,  அரசு பழங்கால  நினைவுச்சின்னமாக அறிவித்தது.

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அச்சியுத தேவ ராய விசயநகரப்பேரரசு கட்டிய கோவில் தூண்களில் செதுக்கப்பட்டசில சிற்பங்கள் தமிழ்நாட்டில் சமணக் கோவில்களில் சிதைக்கப்பட்டவைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவலர்கள் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடமிருந்து மீட்டு அவை சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ளன.

 மேற்குறித்துள்ள செய்திகள் மிகவிரிவாகச் செய்தித்தாளில் இடம்பெற்றுள்ளன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக