புதன், 17 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 767

திருக்குறள் – சிறப்புரை : 767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. --- ௭௬௭
பகைவரால் தொடுக்கப்பட்ட போரின் வலிமையையும் சூழ்ச்சிகளையும் அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் போர்மேற்செல்லும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு பகைவர் படையை எதிர்கொள்ள முனைவதே சிறந்த படையாகும்.
”நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்..” --புறநானூறு.
 வேந்தே..! ஆவலால் வெற்றிபெற விரும்பிவந்த பகைவர்,நின்னை எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக