ஞாயிறு, 21 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 770

திருக்குறள்- சிறப்புரை : 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.-- ௭௭0
ஒரு படை, திறமையும் வீரமும் பொருந்திக் களத்தில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும்  தகுதிவாய்ந்த நல்ல படைத்தலைவர்  இல்லாதுபோனால் படை, பயனற்றதாகிவிடும்.
” வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழு உறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்.” – சிறுபாணாற்றுப்படை.

சேரநாட்டு அரசர் குடியில் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த வலிய தோளை உடையவனும் வட இமயத்தில் தன் வில் இலச்சினையைப் பொறித்தவனுமான குட்டுவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக