புதன், 3 ஜூன், 2020


தன்னேரிலாத தமிழ் - 81

வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
 வாழச் செய்த நல்வினை அல்லது
 ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை.” ~~ புறநானூறு.

இவ்வுலகில் வாழ்வதற்கு என்று வரையறுக்கப்பட்ட காலம் முழுதும் குறைவற வாழ்தல் வேண்டும் ; வாழும்பொழுது நல்வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும்பொழுது அஃதொன்றே துணையாவதன்றிப் பிறிதொன்றும் துணையாவதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக