வியாழன், 4 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 82


தன்னேரிலாத தமிழ் - 82

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.” ~ சிலப்பதிகாரம்.

ஆற்றலுடைய அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறியும் சிறப்பாக அமையாது என்பது பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக