செவ்வாய், 8 செப்டம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்- 150

 

தன்னேரிலாத தமிழ்- 150

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். --குறள். 457.

 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்- என்ற  ஓர் உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை  உலகிற்கு வழங்குகிறார் திருவள்ளுவர். மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் .

மேற்சுட்டியுள்ள குறட்பாவை, அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனநலம் என்பது மனத்துக்கண் மாசின்றி இருத்தலே. அஃதாவது..

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. --குறள். 34.

ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

To be quite free from mental blots is all that’s righteousness

And all the rest of acts without such freedom are but fuss.

                                                                 (Tr.)  K.M.Balasubramaniam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக