திங்கள், 17 ஆகஸ்ட், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-69- : தெளிவுரை : முனைவர் ச.வே. சுப்பிரமணியன்

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-69- ஓர் அறிவியல் அறிஞர்  

                        எழுத்துக்களது பிறப்பு 

ஆய்வுரை. நச்சினார்க்கினியர் உரை:   

பிறப்பியல் - ூற்பா 84.  

அவ்வழி  

பன்னீருயிருந் தந்நிலை திரியா   

மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்.  

                              பன்னிரண்டு உயிரும் தத்தம் மாத்திரை திரியாவாய்  அவ்வுந்தியிடத்துப் பிறந்த  மிடற்றின்கண் நிலைபெற்ற காற்றால் ஒலிக்கும் என்றவாறு.   

அவற்றுள் 

் அ ஆ வாயிரண் டங்காந் தியலும் -85. 

                          முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள் அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும் ங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும் என்றவாறு. 

                                                  தெளிவுரை : ச.வே. சுப்பிரமணியன் 

 இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்   

அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன,  

அவைதாம்    

அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய. - 86.  

                      இ ஈ எ ஏ ஐ என்னும் ஐந்து உயிர் எழுத்துகளும் முற்கூறியதுபோல் வாயை அங்காத்தலால் தோன்றும் மேலும் அவை மேற்பல்லின் அடியை நாவினது அடிவிளிம்பு சென்று பொருந்தப் பிறக்கும்.  

உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்   

அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும் - 87.  

                       உ ஊ ஒ ஓ ஒள என ஒலிக்கும் ஐந்து உயிர் எழுத்துகளும் இதழ் குவித்துச் சொல்லப் பிறக்கும்.   

தம்தம் திரிபே சிறிய என்ப. -88.  

அவை ஒலிக்கும்போது சிறிய அளவில் வேறுபாடு ஏற்படலாம்.  

ககா காரம் முதல்நா அண்ணம் - 89.  

 அடி நா, அடி அண்ணத்தைப் பொருந்த க, ங பிறக்கும்.  

        சகார ஞகாரம் இடைநா அண்ணம்.- 90. 

 இடைநா, இடை அண்ணத்தைப் பொருந்த ச, ஞ பிறக்கும். ..............................தொடரும்.........................................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக