வியாழன், 6 அக்டோபர், 2011

களப்பாள்...-2

திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாருக்கு அமுதருத்திய சிவாநுபூதிச் செல்வராகிய நம்பியாண்டார் நம்பி அப்பொல்லாப்பிள்ளையார் திருவருளாலருளிய திருத்தொண்டர் திருவந்தாதியினுள்
நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல
போதம் கருத்திற் பொறித்தமையால் அது கை கொடுப்ப
ஓதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோலின் வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளனாகிய கூற்றுவனே
எனவும்-
சைவசித்தாந்த சாத்திரோபதேசஞ் செய்தற் பொருட்டு எழுந்தருளிய சந்தான குரவருள் ஒருவரும் தில்லை வாழ் அந்தணருள் ஒருவரும் ஆகிய உமாபதி சிவாசாரியார் அருளிய திருத்தொண்டர் புராண சாரத்தினுள்
குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்
   கூற்றுவனார் மாற்றலர் மண் கொண்டு சூடப்
பொன் தாழும் முடிவேண்டப் புலியூர் வாழும்
   பூசுரர்கள் கொடாது அகலப் புனிதன் ஈந்த 
மன்றாடும் திருவடியே முடியாச் சூடி
   மாநிலங்காத்து இறைவன் உறை மாடக்கோயில்
தென்திசையுடன் வணங்கிப் பணிகள் செய்து
       திருவருளால் அமருலகம் சேர்ந்துளாரே
எனவும்                                                       (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக