திங்கள், 31 அக்டோபர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -8

நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்ற வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியின்
புன் தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி
காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர்  (கல்லாடனார்,அகம்.113:1-5)
உரை: நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடுற்றபோது அவர்பால்கொண்ட நட்பில்  ஒருபொழுதும் மாறுபாடு கொள்ளாதவராய் அவர்க்குத் தாமே வலியசென்று  உதவும்  பிறழாத கோட்பாடு உடையவர்கள் கோசர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக