புதன், 5 அக்டோபர், 2011

ஊரும் பேரும்

களப்பாள் - களந்தை
திருவிசைப்பா அருளிச் செய்த கருவூர்த் தேவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்களந்தை ஆதித்தேச்சரம்- பண் புறநீர்மை
கலைகடம் பொருளு மறிவுமா யென்னைக்
   கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினு நல்ல
   முக்கணா நுறைவிடம் போலு
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
   மருங்கெலா மறையவர் முறையொத்
தலைகடன் முழங்கு மந்தணீர்க் களந்தை
   யணிதிக ழாதித்தேச் சரமே.
சைவ சமயந்தழைத்தோங்கற் பொருட்டுத் திருவவதாரம் புரிந்து தமிழ் வேதமாகிய தேவார திருவாசக மருளிச் ச்ய்த சமயக்குரவரு ளொருவராகிய சுந்தர மூர்த்தி நாயனா ( சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்க) திருவாய் மலர்ந்தருளிய திருத் தொண்டத் தொகையினுள் 
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
எனவும்  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக