புதன், 2 நவம்பர், 2011

அழிக்கப்படும் நூலகங்கள்

அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில் கட்டிக் காத்த (லைசியம் ) நூலகம் ரோமனிய படையெடுப்பில் அழிக்கப்பட்டது இனவெறிக்கு இலக்கான யாழ் நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. தமிழகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நூலகம் ஆய்வுக்குப் பயனின்றி அள்ளி எறியப்பட்டது.அண்ணா நூற்றாண்டு நுலகத்தையும் அழிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது.ஒருநாட்டிற்குப் பெருமை தருவன கல்விக்கூடங்களா ? மருத்துவமனைகளா?.
உலகின் மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கிய மாமேதை லெனினை நினத்துப்பாருங்கள். 
கல்வியின் அருமை பெருமைகளைத் தமிழும் காமராசரும் பிறந்தமண்ணில்  பேசவேண்டிய நிலை ஏற்பட்டதே.
தமிழை அழிக்க நினைத்தால்... தலைமுறை தழைக்காது
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் -குறள் 448

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக