புதன், 16 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

பாடல் கிடைக்கவில்லையே...
தமிழகப் படுத்த இமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெரு நாளிருக்கைத்
தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்
கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
                                   - நக்கீரர்,அகம். 227:14-20
உரை-
 தழும்பனின் வீரமும் வண்மையும் தமிழ்நாடு  முழுதும் பரந்திருந்தமையின் தமிழகப்படுத்த இசை முரசு என்றார். வாளினையும் முரசினையும் இருக்கையினையும் உடைய தழும்பன் எனவும் தூங்கல் பாடிய நல்லிசைத் தழும்பன் எனவும் கூட்டுக. தூங்கல் - தூங்கல் ஓரியார் என்னும் புலவர். அவர் தழும்பனைப் பாடிய பாட்டுக் கிடைத்திலது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக