திங்கள், 28 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

பருவம் உற்றனள்..
கூழையும் குறுநெறி கொண்டன முலையும்
சூழி மென்முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள்  இவள் எனப் பன்மாண்
கண் துணையாக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியாமையிற் செறியேன் யானே
                       குடவாயிற் கீரத்தனார்,அகம்.315:1-6
உரை:- தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன.முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் என்னும் இயல்பினை அமைந்தனள். -என்று- என் கண்களேபலமுறை பார்த்து எனது நெஞ்சமானது நேற்றும் ஐயுற்றது.அதன் பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை  இற்செறியாது ஒழிந்தேன்  (வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்யாது விட்டேன் என்பதாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக