வெள்ளி, 22 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 27

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 27
காவிரியில் கல்லணை – 4
தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை
                                                    ---- மணிமேகலை. பதிகம் : 24 – 25
வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவிரி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி
                                                        ----- சிலப்பதிகாரம் . கானல்வரி : 27
காவிரிப் புரப்பதற்குக் காரணம் கரிகால்வளவனின் செங்கோலே எனச் சிறப்பித்தார் இளங்கோவடிகள் –      
  “ கரிகால்வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறை பிடித்துக்கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான். ‘முடிகொண்டான்’ ஆறும் இவனால் வெட்டப்பட்டது போலும் ! காவிரிக் கல்லணை கி.பி. 1068இல் வீரராசேந்திரனால் வெட்டப்பட்டதாகத் தெரிகின்றது. “ – பாவாணர்.         
மேற்சுட்டிய சான்றுகளாலும் காவிரியில் கல்லணை இருந்ததென்றும் அதனைக் கட்டியவன் கரிகாலன் என்பதும் தெற்றென விளங்கும்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக