சனி, 30 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 312

திருக்குறள் – சிறப்புரை : 312
பழிக்குப் பழி - பகையே
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். – 312
வஞ்சக மனத்தன் ஒருவன் தனக்குத் தீங்கு செய்தபோதும் அவனைப் பழிதீர்த்தல் பொருட்டு தானும் அவனுக்குத் தீங்கு  செய்யாமல் இருப்பது  மாசற்ற மனமுடையாரின் கொள்கையாம்.
பழி தீர்க்க எண்ணும் மனம் மாசுடையது. 

2 கருத்துகள்: