சனி, 21 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-19


தன்னேரிலாத தமிழ்-19

நன்மைதரும் நட்பு…!

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.” திரிகடுகம்.

தாளாண்மை என்னும் முயற்சி உடையான் கடன்படாமல் வாழ்பவன்; வேளாளன் என்பான் வந்த விருந்தினர் பசித்துஇருக்கையில் தனித்து உண்ணாதான்; பிறர் மனத்தை அறிந்து கொள்ளும் தன்மை உடையவன் கேட்டவற்றை மறவாதான்; இம்மூவரையும் ஒருவன் தனக்கு நட்புடையவானாகக்கொண்டு வாழ்தல் நன்மை தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக