புதன், 6 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -53


தன்னேரிலாத தமிழ் -53

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார். ---நீதிநெறிவிளக்கம்.

தாம் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பதிலேயே கருத்து உடையவர்கள், உடல் உழைப்பினால் வரும் வருத்தத்தையும் பசியையும் உறக்கத்தையும் பிறர் செய்யும் தீமையையும் காலத்தின் அருமையையும் பிறர் செய்யும் அவமதிப்பையும் இடையூறாகக் கருதமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக