வெள்ளி, 15 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-216.

 

தன்னேரிலாத தமிழ்-216.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

 வீற்றிருந்த வாழ்வும் விழும்  அன்றே ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு. “ ----நல்வழி, 12.

ஆற்றங் கரையில் இருக்கின்ற மரத்தின் வாழ்வும் ஓர் அரசின்கண் சிறப்பாக வீற்றிருந்தவருடைய  வாழ்க்கையும் நிலைத்திராமல் அழியும். உழுதொழில் அல்லாத மற்றத் தொழில்களுக்குப் குற்றங்குறைகள் உண்டு. ஆனால், உழுது பயிர்செய்து வாழ்பவருடைய உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக வேறோர் வாழ்க்கை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக