புதன், 24 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-257.

 

தன்னேரிலாத தமிழ்-257.

கல்லான் கடை சிதையும் காமுகன் கண் காணான்

புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் நல்லான்

இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்

நடுக்கமும் நன் மகிழ்வும் இல்.”அறநெறிச்சாரம், 151.

கற்று அறியாத மூடன் கடையனாய் அழிவான்  ; காமம்மிக்கவன் சேரத் தகுந்த, சேரத்தகாத மகளிர் இவர் என்பதை அறியான் ;  அற்பனோ செல்வம் கிடைத்தவுடன் தன் தகுதி மறந்து ஆடுவான் ; அறிவுடைய நல்லவன் இன்பம் துன்பம் இரண்டையும் அடையும் போது முறையே மகிழ்தலும் வருந்துதலும் அற்றவன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக