வியாழன், 25 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-258

 

தன்னேரிலாத தமிழ்-258.

நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்

கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ பொருள் ஆய

இச் சுற்றத்தாரில் எனக்கு.”அறநெறிச்சாரம், 161.

தலைசிறந்த அறமே என் தந்தை ; காப்பன காத்து, கடிவன கடியும் அறிவே என் தாய் ; நன்மை தீமைகளை உணர்வதற்குக் காரணமான கல்வியே என் தோழன் ;  தக்கன துணியும் மனத் தெளிவே என் தம்பி ; சிறந்த உறுதியைப் பயக்கும் இச் சுற்றத்தாரைக்காட்டிலும் தந்தை, தாய், தோழன், உடன்பிறந்தார் என்று அழைக்கப்படும் பொய்ச் சுற்றத்தார் எமக்கு உறுதி பயப்பரோ..? இல்லை என்பதாம்.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக