சனி, 27 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-259.

 

தன்னேரிலாத தமிழ்-259.

ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்

வெறுப்பார்க்கு நான் மடங்கே என்ப ஒறுத்தியேல்

ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்

ஊர் பகை நின்கண் ஒறு.” –அறநெறிச்சாரம், 99.

 எனக்குத் துன்பம் செய்கின்றவர்க்குத் துன்பம் செய்வேன்; தீயவர்களுக்குத் தீமை செய்வேன் ; என்னை வெறுப்பாரை நான்கு மடங்கு அதிகமாக நானும் வெறுப்பேன் என்று உலகத்தார் கூறுவர்; நெஞ்சே..! நீயும் இவற்றை விரும்பி மேற்கொண்டு மற்றவர்களை அடக்க நினைத்தால் ஆசை, அறியாமை, பகை உணர்ச்சி ஆகிய மூன்றும் உன்னிடத்தே தோன்றும் பகைகளாகும். எனவே, இப்பகைகளையெல்லாம் அடக்கி வாழ்தல் நன்றாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக