புதன், 4 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –309.

 

தன்னேரிலாத தமிழ் –309.

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார். –குறள்,1289.

 

பெண்:  கண்ணில் வந்து மின்னல் போல் காணுதேஇன்பக்

காவியக் கலையே ஓவியமே !

 

ஆண்: செங்கனி போல் சுவைதரும் மா மணி எனப்

பாடிடும் பூங்குயிலேஇன்பக்

காவியக் கலையே ஓவியமே !

 

பெண்: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே

உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே !

 

ஆண்: நீலவானம் இல்லாத ஊரே இல்லை

உலகினிலே மழையின்றி வாழ்வே இல்லை

அமுதே உனையன்றி வாழ்வே இல்லை

அன்பே இது உண்மையே !

 

பெண்: அங்கும் இங்கும் விளையாடி அலை போலே உறவாடி

ஆனந்தம் காணும் நேரம் தானே

உள்ளத்தில் ஆசையே உன்னைத் தேடுதே !

ஆண்: கொஞ்சிப் பேசுங் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே

 மானே ! மலரினும் மெல்லியதுகாதலே !

 

பெண்: மகிழ்வோம் நாமே !

----கவிஞர் சுரதா, படம்: நாடோடி மன்னன், 1958.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக