வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –329.

 

தன்னேரிலாத தமிழ் –329.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை. –குறள்.331.

கருவுலகில் உருவாகி

மறுவுலகில் வரும் நாளைக்

கண்டறிந்து சொல்வாருண்டுஇந்தத்

திருவுடலில் குடியிருக்கும்

சீவன் பிரியும் நாளைத்

தெரிந்தொருவர் சொன்னதுண்டோ?

 

வருவனவும் போவனவும்

விதியென்று வைத்தவன்

வாழ்வினை விதைத்த உழவன்அவன்

அறுவடைக் காலத்தில்

அழுதாலும் தொழுதாலும்

அனுதாபம் காட்டுவானோ?

---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: செளபாக்கியவதி,1957.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக