வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –322

 

தன்னேரிலாத தமிழ் –322

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல். –குறள். 443

 

பூந்தென்றல் இசை பாட

புகழ் பாணர் கவி பாட

சான்றோர்கள் மடி தன்னில்

விளையாடும் தமிழ் வாழ்க !

அறிவான முப்பாலும் கனிகொடுக்க

திருவாசகம் வந்து பனிதெளிக்க

கொடிபோன்ற இளம்பெண்கள் கற்பினிலே

கொலுகொண்டு முதிராத் தமிழ் வாழ்கவே (பூந்தென்)

 

வேல்தேடி எறிகின்ற வீரம் உண்டு

நூல்தேடி தருகின்ற ஞானம் உண்டு

சூல்கொண்ட குலமங்கை திருமுகம் போல்

சுடர்கின்ற புதுமஞ்சள் தமிழ் வாழ்கவே (பூந்தென்)

 --கவிஞர் மாயவநாதன், படம்: தாயின் கருணை, 1965.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக