சனி, 21 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –324.

 

தன்னேரிலாத தமிழ் –324.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. –குறள்.5.

 

இறைவன் படைத்த உலகை எல்லாம்

மனிதன் ஆளுகின்றான்

மனிதன் வடித்த சிலையில் எல்லாம்

இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்

உண்மை பிறப்பதில்லை

உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்

ஒன்றும் நடப்பதில்லை !

இரண்டு மனிதர் சேர்ந்தபோதும்

எண்ணம் வேறாகும்

எத்தனை கோயில் இருந்தபோதும்

இறைவன் ஒன்றாகும்

இசையால் இறைவனை இரங்க வைப்பது

மனிதனின் குணமாகும்அந்த

இசையில் மயங்கி இரங்கி வருவது

இறைவன் மனமாகும்.

 --கவிஞர் பூவை செங்குட்டுவன், படம் : வா ராஜா வா,1969.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக