தமிழமுது –265– தொல்தமிழர் இசை மரபு:125. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி ; பக்தி இலக்கியங்கள்: பண்சுமந்த பாடல்கள்.
பண்சுமந்த பாடல்கள் அட்டவணை
பண்.
01. நட்டபாடை. கட்டளை 8 பதிகத்தொகை.22
02 தக்கராகம்--கட்டளை...7 பதிகத்தொகை.........24.
03. பழந்தக்கராகம்..............கட்டளை.3.. பதிகத்தொகை............1
04. தக்கேசி...........கட்டளை.......2..பதிகத்தொகை.........12
05. குறிிஞ்சி..................கட்டளை5............பதிகத்தொகை29 ....
06. வியாழக்குறிஞ்சி...கட்டளை6. பதிகத்தொகை.......25.
07்மேகராகக்குறிஞ்சி.........கட்டளை 2.......பதிகத்தொகை.....8
08ீ சீகாமரம்.......கட்டளை...2.........பதிகத்தொகை.....14.
09.காந்தாரம்......கட்டளை......3....பதிகத்தொகை,,,,,,29
010.பியந்தைக் காந்தாரம்.....கட்டளை.......3..,பதிகத்தொகை,,,,,14.
011.நட்டராகம்......கட்டளை.....2...பதிகத்தொகை.............16
012. செவ்வழி,,....கட்டளை.....1......பதிகத்தொகை.....10
013காந்தார பஞ்சமம்......கட்டளை......3......பதிகத்தொகை.......23.
014. கொல்லி..........கட்டளை..4....பதிகத்தொகை.....18.
015 கொல்லி கொளவாணம்.....கட்டளை....4....பதிகத்தொகை......10.
016. கெளசிகம்....கட்டளை....2...பதிகத்தொகை..........14.
017. பஞ்சமம்......கட்டளை,......1...பதிகத்தொகை....11.
018 சாதாரி ......கட்டளை........9....பதிகத்தொகை.....33.
019 பழம்பஞ்சுரம்...கட்டளை....000...பதிகத்தொகை....17.
020 புற நீர்மை......கட்டளை...1...பதிகத்தொகை..........6.
021 அந்தாளிக் குறிஞ்சி.....கட்டளை....1....பதிகத்தொகை....2.
...................................................................383.
. மேற்குறித்தவைகளில் பழம்பஞ்சுரம் என்ற பெயர் திருமுறைகண்ட புராணத்தில் காணப்படவில்லை. தமிழிலே திணை பற்றி வகுக்கப்பெற்ற பெரும்பண்கள் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ் என நான்காகும்.
இவை ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நந்நான்கு இனமாகும். இனி, பாலையாழுக்குத் திறம் ஐந்தும் குறிஞ்சியாழுக்குத் திறம் எட்டும் மருதயாழுக்குத் திறம் நான்கும் செவ்வழியாழுக்குத் திறம் நான்கும் ஆக இருபத்தொரு திறப்பண்கள் உள்ளன.
இவையும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் வேறுபாட்டால் நந்நான்காகும். மேலே குறித்த சம்பந்தர் பண்களில் எவ்வெவை எவ்வெவற்றை சாரும் என்பதனை நோக்குதும்.
பாலையாழ் - தக்கராக -அராகம் என்னும் திறத்தின் அகநிலை. குறிஞ்சியாழ் - நட்டபாடை -நைவளம் என்பதன் அகநிலை.
மருதயாழ் - தக்கேசி-வவிர் என்பதன் அகநிலை.
செவ்வழியாழ் - சாதாரி - முல்லை என்பதன் புறநிலை.
அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆய்வுரை.
..................................................தொடரும்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக