ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர்:-70- ஓர் அறிவியல் அறிஞர்.
எழுத்துக்களது பிறப்பு :
தெளி்வுரை ; முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.
”டகார ண காரம் நுனிநா அண்ணம்.”-91.
நுனி நா நுனி அண்ணத்தைப் பொருந்த ட, ண பிறக்கும்.
”அவ்வாறெழுத்தும் மூவகைப் பிறப்பின.”- 92.
மேற்கூறிய ஆறு எழுத்துக்களும் மூவகையான பிறப்பை யுடையன.
“அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின்
நா நுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்,”- 93.
் மேல் அண்ணத்தில் நெருங்கிய மேற்பல்லின் அடிப்பக்கத்தில் நாவின் நுனி பரந்து நன்கு அழுத்த த, ந, இரண்டும் பிறக்கும்.
“அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் ்னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.” - 94.
நுனிநா அண்ணாந்து அண்ணத்தைச் சென்று ஒற்ற ற, ்ன, ஆகிய இரண்டும் பிறக்கும்.
“நுனி நா அணரி அண்ணம் வருட
ரகாரம் ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.” -95.
நுனிநா அண்ணாந்து அண்ணத்தைத் தடவ ர, ழ, இரண்டும் பிறக்கும்.
“ நா விளிம்பு வீங்கி அண்பல் முதலுற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளாகரம் ஆயிரண்டும் பிறக்கும்.” - 96.
நாவினது விளிம்பு தடித்து மேற்பல்லின் அடியைப் பொருந்துங்கால் அவ்விடத்தே அண்ணத்தை ஒற்ற ல வும் வருட ள வும் பிறக்கும்.
“ இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.” - 97.
மேல் உதடும் கீழ் உதடும் சேரப் பிறக்கும் ப, ம,
“பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும்,”- 98.
மேல் பல் கீழ் இதழோடு சேர வ, பிறக்கும்.
.............................தொடரும்......................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக