திங்கள், 9 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 675

திருக்குறள் – சிறப்புரை : 675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். --- ௬௭௫
ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டிய அளவு பொருள், தேவையான கருவி, ஏற்ற இடம்  தகுந்த காலம், செயல் முடித்தற்குரிய மனவலிமை ஆகிய இவ்வைந்தினையும் மயக்கமின்றி எண்ணிச் செய்தல் வேண்டும்.
“ நுண் உணர்வு இன்மை வறுமை அஃதுடைமை
  பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் ..” –நாலடியார்.

 வறுமையாவது, நுட்பமான அறிவு இல்லாதிருப்பதே;  மிகவும் வளர்ந்த பெரும் செல்வம் என்பது, நுட்பமான அறிவு உடையவனாதலே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக