சனி, 21 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 687

திருக்குறள் – சிறப்புரை : 687
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.௬௮௭
ஆற்றவேண்டிய கடமை அறிந்து ; செயல்படுத்த வேண்டிய காலம் அறிந்து ; தக்க இடத்தையும் தேர்ந்து ; சொல்லவந்த செய்தியைத் தொகுத்தும் வகுத்தும் தெளிவாக உரைக்க வல்லவனே சிறந்த தூதனாவான்.
“இன்சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா
வன்சொல்லான் ஆகும் பகைமை….” ---சிறுபஞ்சமூலம்.

இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக