திங்கள், 14 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :876


திருக்குறள் -சிறப்புரை :876
தேறுனும்  தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.----- ௮௭
பகைவனை முன்பே ஆராய்ந்து அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும் தனக்கு அழிவு வந்துற்றபோது அப்பகைவனிடத்துச் சேராமலும் அவனை நீக்கி வைக்காமலும் நடுநிலையுடன் வாளாயிருத்தல் வேண்டும்.
“ பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்..” –நாலடியார்.
பல நாள்களும் அருகில் இருப்பவரானாலும் தம் மனதில் சில நாள்கள்கூட ஒட்டாதவரோடு சேர மாட்டார்கள் அறிவாளிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக