திங்கள், 15 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 22

தொல்தமிழர் அறிவியல் – 22
உலகத் தோற்றம் - 5
புருவத்துக் கருவல் கந்தத்தால்
தாங்கி இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினொடு ஒக்கும்
--கடுவன் இளவெயினனார். பரிபா. 4 :  22 – 24
                  பண்டை நாளிலே இந் நிலம் வெள்ளத்தில் மூழ்கியபொழுதுநீ பன்றியாகி வன்மையுடைய கழுத்தாலே தாங்கிஇவ்வுலகத்தை மேலே கொணர்ந்து திருத்திய செயல்நிலத்தின் நடுவே நின்று அதனைத் தாங்கி- உயர்ந்த  பலரானும் புகழப்படும் மேருவின் செயலை ஒக்கும்.
உலகத்தோற்றத்தின் முதல் நிலையாக இமயம் தோன்றியது ஈண்டுச் சுட்டப்படுதல் கொண்டு நிலத் தோற்றம் அறிவியல் ஆய்வு நோக்கில் அமைந்துள்ளது .------தொடரும்……..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக